அமெரிக்காவின் Supreme Court நீதிபதியாக இந்திய தமிழர்?

Srinivasan

அமெரிக்க Supreme Court நீதிபதிகளில் ஒருவரான Antonin Scalia மரணம் அடைந்ததன் காரணமாக நீதிபதிகளுக்கான வெற்றிடம் ஒன்று தோன்றியுள்ளது. அந்த வெற்றுடத்தை நிரப்ப ஜனாதிபதி ஒபாமா முனைகிறார். சட்டப்படி ஒபாமாவுக்கு அந்த உரிமை உண்டு.
.
ஆனால் தற்போது ஜனாதிபதி தேர்தல் வேலைகள் நடைபெறுவதால், அடுத்த ஜனாதிபதியிடம் அந்த பொறுப்பை விடும்படி எதிர் கட்சியான Republican கூறுகிறது.
.
ஒபாமா அந்த வெற்றிடத்தை நிரப்ப குறிப்பட்ட சிலரை கணிப்பீடு செய்வதாக கூறப்படுகிறது. அவ்வாறு கருத்தில் கொண்டோரில் ஒருவர் இந்தியாவில் பிறந்து அமெரிக்கா குடியேறிய தமிழர் ஆவர்.
.
பத்மநாபன் ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன் என்ற இவர் தற்போது ஒரு அமெரிக்க Circuit Court நீதிபதி ஆவார். இந்தியாவின் வடக்கே உள்ள சண்டிகார் என்ற நகரில் இவர் பிறந்து இருந்தாலும் இவரின் தந்தை தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவர்.
.
1967 ஆம் ஆண்டு பிறந்த இவரின் குடும்பம் 1960 களின் பிற்பகுதில் அமெரிக்கவுக்கு குடிபெயர்ந்து இருந்தனர்.
.
இவர் தெரிவு செய்யப்பட்டால் இவரே அமெரிக்காவில் முதல் இந்து Supreme Court நீதிபதியாகவும் இருப்பார்.
.

2013 ஆம் ஆண்டில் இவரை அமெரிக்க Senate 97-0 வாக்களித்து Circuit Court நீதிபதியாக தெரிவு செய்திருந்தது.
.