அல்ஜீரிய முற்றுகையில் 37 கடத்தப்பட்டோர் பலி

அல்ஜீரிய பிரதமர் Abdelmalek Sellal அவர்களின் கருத்துப்படி அந்த நாட்டில் உள்ள In Amenas என்ற இடத்தில் உள்ள BPOil நிலையத்தில் நடைபெற்ற பணியாளர் கடத்தல் விவகாரத்தில் குறைந்தது 37 வெளிநாட்டு பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இறந்த அல்லது காணாமல் உள்ள சில வெளிநாட்டோர் விபரம் வருமாறு:

Colombia: மரணம் 1, காணாமல் உள்ளோர் 1
France: மரணம் 1
Japan: மரணம் 7, காணாமல் உள்ளோர் 10
Malaysia: காணாமல் உள்ளோர் 2
Norway: காணாமல் உள்ளோர் 5
Philippines: மரணம் 6, காணாமல் உள்ளோர் 6
Romania: மரணம் 2
UK: மரணம் 3, காணாமல் உள்ளோர் 3
America: மரணம் 3

கடத்தல் நடைபெற்ற வேளையில் இந்த நிலையத்தில் சுமார் 790 பணியாளர்கள் இருந்துள்ளனர். அவர்களில் 134 பணியாளர்கள் வெளிநாட்டு பிரசைகள். இந்த கடத்தலை நடாத்திவர்கள் அல்ஜீரியா, துனீசியா, எகிப்து, மாலி, நிஜெர், கனடா, Mauritania போன்ற எட்டு நாடுகளில் இருந்து வந்திருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.