இந்திய கல்விநிலைய தீக்கு 19 மாணவர் பலி

Gujarat

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள Surat என்ற நகரில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்துக்கு 19 மாணவர்கள் பலியாகியும், 20 மாணவர்கள் காயமடைந்து உள்ளனர். மரணித்தோரில் 16 பேர் மாணவிகள்.
.
தீ விபத்து இடம்பெற்றபோது இந்த தனியார் கல்விநிறுவன (tuition) வகுப்பறையில் சுமார் 50 மாணவர்கள் இருந்துள்ளனர். தீக்கான காரணம் மின் ஒழுக்கு என்று கூறப்படுகிறது.
.
Takshashila Arcade என்ற இந்த கட்டிடம் ஒரு தட்டு கட்டும் உரிமையே வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் உரிமையாளர் 3 மாடிகளை கட்டி உள்ளார். மூன்றாம் மாடியிலேயே இந்த வகுப்பறை இருந்துள்ளது.

.