உயிர்த்த ஞாயிரு தாக்குதல் தலைவர் கைது

SriLanka

கடந்த உயிர்த்த ஞாயிறு அன்று இலங்கையில் பல தற்கொலை குண்டுகளை வெடிக்க வைத்து சுமார் 250 பேரை பலியாக்கிய செயல்பாடுகளுக்கு உடந்தையாக இருந்தவர் என்று கருதப்படும் Hayathu Mohamed Ahmed Milhan என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இண்டர்போல் (Interpol) அமைப்பு கூறியுள்ளது.
.
இவருடன் மேலும் 4 பேர் அடையாளம் அறிவிக்கப்படாத மத்திய கிழக்கு நாடு ஒன்றில் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்கள் சவுதி அரேபியாவுக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இவர்கள் வெள்ளிக்கிழமை இலங்கையை அடைந்தனர் என்றும் கூறப்படுகிறது.
.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக இதுவரை சுமார் 102 சந்தேக நபர்களை கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

.