எதிர்ப்புகள் மத்தியில் ஹாங் காங்கில் புதிய சட்டம்

HongKong

ஹாங் காங் இளையோர் மற்றும் மேற்கு நாடுகள் முன் வைத்த பலமான எதிர்ப்புகள் மத்தியிலும் சீன மத்திய அரசு ஹாங் காங் மீதான தனது புதிய சட்டங்கள் சிலவற்றை செய்வாய்க்கிழமை இரவு 11:00 மணி முதல் நடைமுறை செய்கிறது. புதிதாக நடைமுறை செய்யப்படும் சட்டங்கள் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வரையான தண்டனைகளை வழங்க முடியும்.
.
புதிய சட்டப்படி 1) பிரிவினைவாதம் (secession), 2) அரசுக்கு எதிராக செயற்படல் (subversion), 3) பயங்கரவாதம் (terrorism), 4) அந்நியருடன் இணைத்து நாட்டுக்கு எதிராக செயல்படல் (collusion) ஆகியன பாரிய குற்றங்கள் ஆகும்.
.
அத்துடன் பின்வரும் 3 சூழ்நிலைகளில் சீனாவின் மத்திய அரசு நேரடியாக ஹாங் காங் விசயங்களில் தலையிடும்: 1) அந்நியர் தலையீட்டு கொண்ட விசயங்கள், 2) ஹாங் காங் அரசின் கட்டுப்பாட்டை மீறிய விசயங்கள், 3) தேசிய பாதுகாப்புக்கு குந்தகமான விசயங்கள்.
.
புதிய சரத்துகள் ஹாங் காங்கின் Annex III of the Basic Law சட்டத்துள் அடங்கும்.
.
இந்த சட்டத்தை எதிர்த்த அமெரிக்கா சில சீன அதிகாரிகள் மீது தடைகளை விதித்தது. உடனடியாக சீனாவும் சில அமெரிக்க அதிகாரிகள் மீது தடைகளை விதித்தது.
.
கடந்த சில மாதங்களாக ஹாங் காங் இளையோர் சீனாவின் தேசிய கொடியை எரித்து, அமெரிக்க மற்றும் பிரித்தானிய கொடிகளை உயர்த்தி பிடித்து இருந்தனர். அவ்வகை செயல்கள் தற்போது தேசிய குற்றமாகும்.
.