ஐ.நா.: இவ்வருடம் 700,000 அகதிகள் ஐரோப்பாவில்

Refugee

மத்திய கிழக்கு நாடுகளில், குறிப்பாக சிரியாவில் நடைபெறும் யுத்தங்கள் காரணமாக இந்த வருடம் மட்டும் 700,000 இக்கும் அதிகமான அகதிகள் ஐரோப்பாவை கடல் மூலம் அடைந்துள்ளதாக ஐ.நா. கூறியுள்ளது. அதேவேளை 3,210 க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.
.
இவர்களில் 562,355 பேர் கிரேக்கத்தை அடைந்து பின் ஜெர்மனி போன்ற மேற்கு ஐரோப்பாவை அடைந்துள்ளனர். இத்தாலி வழியாக சுமார் 140,000 பயணித்துள்ளனர். பல்லாயிரம் அகதிகள் இஸ்பெயின் மூலம் பயணித்துள்ளனர்.
.
இந்த அகதிகளில் 20% சிறுவர்கள், 15% பெண்கள், மிகுதி 65% ஆண்கள். இந்த அகதிகளில் அரை பங்கிற்கும் மேலானோர் சிரியாவில் இருந்தும், அதற்கு அடுத்த தொகையானோர் ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும் வந்துள்ளனர். ஏனையோர் எரித்திரியா, நைஜீரியா, பாகிஸ்தான், சோமாலியா, சூடான், பங்களாதேசம் போன்ற நாட்டவர்.
.
இரண்டாம் உலக யுத்தத்தின் பின் இப்போதே ஐரோப்பா இவ்வளவு அகதிகளை சந்திக்கிறது.