கள்ள கசிப்புக்கு மேலும் 78 இந்தியர் பலி

Assam

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் 78 பேர் கள்ள கசிப்புக்கு பலியாகி உள்ளனர். அத்துடன் 100 பேர் வரை சிகிச்சை பெற்றும் வருகின்றனர். மரணித்தோருள் பெண்களும் அடங்குவர். மரணித்தோர் தொகை மேலும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
.
இங்கு கள்ள கசிப்பால் பாதிகப்பட்டோர் அனைவரும் Golaghat மற்றும் Jorhat பகுதி தேயிலை தோட்ட ஊழியர்களே. இவர்களுக்கு அண்மையிலேயே ஊதியம் கிடைத்திருந்தது.
.
Jorhat Mediacl College என்ற வைத்தியசாலையில் மட்டும் 9 பெண்களும், 11 ஆண்களும் சிகிசைகள் பயனளிக்காததால் பலியாகி உள்ளனர்.
.
இரண்டு கிழமைகளுக்கு முன்னர் உத்தரபிரதேசத்தில் கள்ள கசிப்புக்கு 100 பேர் பலியாகி இருந்தனர்.
.
2011 ஆம் ஆண்டு மேற்கு வங்கம் மாநிலத்தில் 172 பேர் கள்ள கசிப்புக்கு பலியாகி இருந்தனர்.

.