காஸ்மீர் மாநில ஆட்சி கவிழ்ந்தது

Kashmir

பாரதீய ஜனதா கட்சியின் (BJP) உதவியுடன் காஸ்மீர் மாநில கட்சியான People’s Democratic Party (PDP) தலைமையில் இருந்த ஆட்சி, BJP கூட்டு ஆட்சியில் இருந்து விலகியதால், கவிழ்ந்துள்ளது. இந்தியாவில் இஸ்லாமியர் பெரும்பான்மையாக உள்ள ஒரே மாநிலமான ஜம்மு-காஸ்மீரில் 2015 ஆம் ஆண்டுமுதல் இந்த கூட்டு ஆட்சியில் இருந்துள்ளது.
.
தற்போது PDP கட்சியிடம் 28 ஆசனங்களும், BJP கட்சியிடம் 25 ஆசனங்களும் உள்ளன. அந்த மாநிலத்தில் பெரும்பான்மை ஆட்சி செய்ய குறைந்தது 45 ஆசனங்கள் தேவை.
.
ஆட்சி கவிழ்ந்தமையால் மாநில முதல்வர் Mehbooba Mufti தனது பதவியை விலகி உள்ளார்.
.
அந்த மாநிலத்தின் தெற்கே அதிகமாக இந்துக்கள் குடியுள்ளனர். அதனால் தெற்கே BJP செல்வாக்கில் உள்ளது. இஸ்லாமியர் அதிகம் உள்ள வடபகுதியில் PDP செல்வாக்கில் உள்ளது. PDP காஸ்மீர் கிளர்ச்சியாளர் மீது அனுதாபம் கொண்ட ஒரு காட்சியாகும்.
.
PDP அங்கு வன்முறைகளை கட்டுப்படுத்தவில்லை என்பதே BJPயின் குற்றச்சாட்டாகும்.

.