தாய்வான் ரயில் விபத்தில் 50 பேர் பலி

தாய்வான் ரயில் விபத்தில் 50 பேர் பலி

வெள்ளிக்கிழமை தாய்வானின் தலைநகரில் இருந்து  TaiTung என்ற நகரை நோக்கி சென்ற Taroko Express என்ற அதிவேக ரயில் விபத்துக்கு உள்ளானதால் குறைந்தது 50 பேர் பலியாகியும் 146 பேர் காயப்பட்டும் உள்ளனர். மேற்படி ரயில் குகைவழி ஒன்றுள் (ChingShui Tunnel) செல்ல ஆரம்பித்த வேளையிலேயே விபத்து நிகழ்ந்துள்ளது.

குகைவழிக்கு மேலே இருந்த கட்டுமான பார வாகனம் ஒன்று ரயிலின் பாதைக்கு குறுக்கு வழுக்கி இருந்துள்ளது. அப்போது அவ்வழி வந்த வேகமான ரயில் வீழ்ந்து இருந்த பார வாகனத்துடன் மோதியுள்ளது.

மொத்தம் 8 பயணிகள் பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில் 496 பயணிகள் இருந்துள்ளனர். மோதலின் பின் முன்னே இருந்த இரண்டு பெட்டிகள் பாதையை விட்டு விலகி பின் குகையுள் இழுபட்டு உள்ளன. குகையுள் நுழையாத பெட்டிகள் பாரிய பாதிப்புக்கள் இன்றி தப்பியுள்ளன.

இந்த ரயில் 130 km/h வேகத்தில் செல்ல வல்லது.