நான்கு தடவை முதலமைச்சர் வகுப்பு 12 சித்தி

OmPrakash

இந்திய வட மாநிலமான ஹர்யானாவில் (Haryana) நான்கு தடவைகள் முதலமைச்சராக இருந்த Om Prakash Chautala தனது 82 ஆவது வயதில், சிறை தண்டனை ஒன்றை அனுபவிக்கும் காலத்தில், 12 ஆம் வகுப்பு சித்தியை அடைந்துள்ளார்.
.
மேற்படி முன்னாள் முதலமைச்சர் தனது நாலாவது ஆட்சி காலத்தில் செய்த ஊழல் குற்றத்துக்கான 10 வருட சிறைவாசம் செய்கையிலேயே இந்த சாதனையை புரிந்துள்ளார்.
.
2013 ஆம் ஆண்டு புது டெல்லி நீதிமன்ற நிரூபிப்புப்படி இந்த முதலமைச்சர் எந்தவித தகுதியும் அற்ற 3,206 நபர்களுக்கு, கள்ள ஆவணங்கள் தயாரித்து, ஆசிரியர் பதவி வழங்கி உள்ளார். அதவேளை தகுதி உடைய ஆசிரியர்களின் விண்ணப்பங்களை இவர் நிராகரித்தும் உள்ளார்.
.
இந்த முதலமைச்சர் Indian National Lok Dal கட்சியின் தலைவரும் ஆவார்.

.
மேற்படி முதலமைச்சருடன், அவரின் மகன் ஒருவர் உட்பட, மொத்தம் 54 பேர் சிறை சென்றுள்ளார்.
.