பிரித்தானிய இராணுவம் மீது யுத்தக்குற்ற விசாரணை

ICC

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் பிரித்தானிய படைகள் யுத்தக்குற்ற செயல்களில் ஈடுபட்டனவா என்பதை விசாரணை செய்ய ICC (International Criminal Court) தீர்மானித்துள்ளது. அத்துடன் அதை பிரித்தானிய தவறுகளை மூடிமறைக்க முயன்றதா என்பதையும் ICC ஆராயும்.
.
இன்று திங்கள் BBC செய்தி நிறுவனம் War Crime Scandal Exposed என்ற தலைப்பில் ஒளிபரப்பிய ஆக்கம் ஒன்றின் பின்னரே ICC விசாரணைக்கு முன்வந்துள்ளது.
.
குறிப்பிட்ட சம்பவம் ஈராக்கில் பிரித்தானிய இராணுவம் கொண்டிருந்த Camp Stephen என்ற முகாமிலேயே இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இங்கு 2003 ஆம் ஆண்டில் இரண்டு அப்பாவிகள் மரணித்து இருந்தனர். இவர்கள் இருவரும் அப்பாவி பொதுமக்கள் என்பதை பிரித்தானிய ஏற்றுக்கொண்டுள்ளது.
.
பிரித்தானிய அரசு தாம் சம்பவத்தை விசாரணை செய்ததாகவும், தவறுகள் எதுவும் இடம்பெற்று இருக்கவில்லை என்றும் கூறியுள்ளது.
.