ரயில் வெள்ளத்தில், 1050 பேர் மீட்கப்பட்டனர்

IndianRailways

வெள்ளி இரவு வெள்ளத்தில் அகப்பட்டுக்கொண்ட Mahalaxmi Express என்ற ரயிலில் இருந்து 1,050 பயணிகள் மீட்க்கப்பட்டு உள்ளனர். இந்தியாவின் மும்பாய் நகருக்கு அண்மையில் உள்ள Vangani என்ற சிறுநகருக்கு அண்மையிலேயே இந்த ரயில் வெள்ளத்தில் அகப்பட்டுக்கொண்டது.
.
பயணிகளை ரயிலிலேயே தொடர்ந்தும் இருக்குமாறு கூறியிருந்தாலும், சுமார் 15 மணித்தியாலங்கள் நீர், உணவு இல்லாத காரணத்தால் பயணிகள் வள்ளங்கள் மூலம் மேட்டு நிலங்களை அடைந்து உள்ளனர்.
.
Badlapur, Ulhasnagar, Vangani ஆகிய பகுதிகள் பெருமளவில் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன என்று கூறப்படுகிறது.
.
இதுவரை சுமார் 600 பேர் தென்னாசியாவில் வெள்ளம் காரணமாக பலியாகி உள்ளனர்.

.