வீதி விபத்துகளுக்கு இந்தியாவில் 146,133 பலி

India

இந்தியாவில் இடம்பெறும் வீதி விபத்துகளுக்கு கடந்த வருடம் 146,133 பேர் பலியாகி உள்ளதாக இந்திய போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது. அதாவது நாள் ஒன்றுக்கு சுமார் 400 பேர் வீதி விபத்துகளுக்கு பலியாகின்றனர். 2014 ஆம் ஆண்டில் அங்கு பலியானோர் எண்ணிக்கை 139,671.
.
அதேவேளை 2015 இல் காயப்பட்டோர் தொகை 501,423 ஆகவும், 2014 ஆம் ஆண்டில் அத்தொகை 489,400 ஆகவும் இருந்துள்ளன.
.
மரணித்தோரில் 80% தொகையினர் தமிழ் நாடு, மகாராஷ்டிர, மதிய பிரதேசம், கர்நாடகம், கேரளா, உத்தர பிரதேசம் உட்பட்ட 13 மாநிலங்களை சார்ந்தோர் ஆவர்.
.
சாரதிகள் அளவுக்கு அதிக வேகத்தில் சென்று பின் கட்டுப்பாட்டை இழப்பதே விபத்துகளின் முதல் காரணியாக உள்ளது.
.

அதேவேளை அமெரிக்க வீதி விபத்துக்களுக்கு 2015 ஆம் ஆண்டில் 38,300 பேர் பலியாகி இருந்துள்ளனர்.
.