இந்திரா காந்தி உணவகம், இட்லி 5 ரூபா

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்து பெங்களூர் மாநகரத்தில் வேகமாக அமைக்கப்பட்டு வருகின்றன இந்திரா உணவக (Indira Canteen) நிலையங்கள். இந்த உணவகங்களில் காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளிலும் தயாரிக்கப்பட்ட உணவு மிக மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு காலையில் இட்டலி 5 ரூபா மட்டுமே. தமிழ்நாட்டில் ஜெயலலிதா நடாத்திய அம்மா உணவகம் (Amma Canteen) வழங்கிய அரசியல் இலாபங்களை கண்காணித்த இந்திரா காங்கிரஸ் வாக்கு சேர்க்கும் நோக்கில் கர்நாடகாவில் ஆரம்பித்த உணவகமே Indira Canteen. […]

இலங்கை குடும்பத்தை வெளியேற்றுமா நியூசீலாந்து?

இலங்கை குடும்பத்தை வெளியேற்றுமா நியூசீலாந்து? இலங்கை குடும்பம் ஒன்றை நியூசீலாந்தில் இருந்து வரும் 21 ஆம் திகதிக்கு முன் வெளியேற்ற முனைகிறது அந்நாட்டு குடிவரவு திணைக்களம். அதேவேளை அந்த குடும்பத்துக்கு உதவ முனைகின்றனர் உள்ளூர் மக்களும், அப்பகுதி அரசியல்வாதிகளும். . Dinesha Amarasinghe 2010 ஆம் ஆண்டில் hospitality துறையில் படிக்க முறைப்படி விசா பெற்று நியூசீலாந்து சென்றவர். அவரின் விசா முதன்மை விசாவாக இருக்க, அவரின் கணவர் Sam Amarasinghe, அவர்களின் 3 மகன்கள் உட்பட […]

சிம்பாப்வேயில் இராணுவ ஆட்சி?

சிலகாலத்தின் முன் ரொடீசியா என்று அழைக்கப்பட்ட ஆபிரிக்கா நாடான சிம்பாப்வேயில் இராணுவ ஆட்சி ஒன்று தோன்றும் சாத்தியக்கூறுகள் உருவாகியுள்ளன. தற்போது 93 வயதை அடையும் அந்நாட்டு ஜனாதிபதி ரொபேர்ட் முகாபேயின் (Robert Mugabe) மரணத்தின் பின்னர் ஆட்சியை கைக்கொள்ளும் நோக்கம் கொண்டவர்களே இந்த முரண்பாடுகளில் ஈடுபடுகின்றனர். . அங்கிருந்து வரும் செய்திகளின்படி இன்று புதன்கிழமை குறைந்தது 3 குண்டு வெடிப்புகள் தலைநகரில் இடம்பெறுள்ளன. இராணுவமும் அதிகளவில் நடமாடுகின்றன. முகாபேயின் கட்டுப்பாட்டில் இருந்த ஒளிபரப்பு நிலையத்தையும் இராணுவம் சுற்றிவளைத்துள்ளது. […]

மும்பாயில் சுரங்கம் தோண்டி வங்கி கொள்ளை

கடந்த சனிக்கிழமை மும்பாயில் உள்ள Bank of Baroda வங்கி கிளை ஒன்றில் சுமார் 100 அடி நீள சுரங்கம் அமைத்து கொள்ளையடிக்கப்படுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு நடாத்தப்பட்ட இந்த கொள்ளை விபரம் திங்கள் காலையே வங்கிக்கு தெரிய வந்துள்ளது. . வங்கிக்கு அருகில் உள்ள பலசரக்கு கடை ஒன்றை வாடகைக்கு எடுத்த திருடர், கடந்த நாலு மாதங்களாக சுரங்கம் அமைக்கும் பணியிலும் ஈடுபட்டு உள்ளனர். கடையின் முகப்பு Shree Balaji General Store என்று விளம்பர […]

2018 FIFA World Cup கனவை இழந்தது இத்தாலி

2018 ஆண்டு இடம்பெறவுள்ள FIFA World Cup போட்டியின் இறுதி ஆட்டங்களுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது இத்தாலி. இதற்கு முன் 1958 ஆம் ஆண்டிலும் இத்தாலி FIFA World Cup இறுதி ஆட்டங்களுக்கு செல்லும் வாய்ப்பை இழந்திருந்திருந்தது. இத்தாலி முன்னர் 4 தடவைகள் FIFA World Cup வெற்றியை பெற்றிருந்த முக்கியதோர் உதைபந்தாட்ட நாடு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. . சுவீடன் (Sweden) அணியும் இத்தாலி (Italy) அணியும் ஆடிய ஆட்டம் வெற்றி-தோல்வி இன்றி (0-0) முடிவடைந்ததால் […]

ஈரான்-ஈராக் எல்லையில் நிலநடுக்கம், 150 பேர் பலி

ஈரான்-ஈராக் எல்லையோரம், உள்ளூர் நேரப்படி ஞாயிரு இரவு 9:18 மணியளவில், இடம்பெற்ற நிலநடுக்கத்துக்கு சுமார் 140 பேர் பலியாகியும், 1,500 பேர் வரை காயமடைந்தும் உள்ளனர். பலியானோர் தொகை மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. . எல்லையோரத்தில் உள்ள Sarpol-e Zahab என்ற சிறு கிராமத்தில் மட்டும் சுமார் 60 பேர் பலியாகி உள்ளனர். இப்பகுதிகள் மலைகள் நிறைந்த இடமாகையால் உதவிகள் பாதிக்கப்பட்டோரை அடைவதற்கும் இடராக உள்ளது. . அமெரிக்காவின் Geological Survey என்ற அமைப்பின் கணிப்புப்படி […]

டெல்கி வளிமாசு 44 புகைப்பிடிப்புக்கு நிகர்

இந்தியாவின் தலைநகர் டெல்கி மீண்டும் சுவாசத்துக்கு உதவாத வளியால் சூழப்பட்டு உள்ளது. அங்கு தற்போதை வளி PM2.5 மாசு சுட்டியில் 1,000 அளவீடடை கொண்டுள்ளது. World Health Organization கருத்துப்படி particulate matter 2.5 அல்லது PM2.5 அடிப்படையிலான வளி மாசு சுட்டி 25 க்கும் மேலாக இருப்பது மனித சுவாசத்துக்கு பாதகமானது. . PM2.5 அடிப்படையிலான சுட்டியின்படி ஒரு மீட்டர் கனவளவு வளியில் 25 குக்கும் அதிகமான 2.5 மைக்ரோ மீட்டருக்கும் குறைவான (smaller than […]

Ivanka இந்தியாவுக்கு, பிச்சைக்காரர் சிறைக்கு

அமெரிக்க ஜனாதிபதியின் மகளும், ஜனாதிபதியின் ஆலோசகருமான இவாங்க ரம்ப் (Ivanka Trump) இந்தியாவின் Hyderabad நகருக்கு செல்லவுள்ளார். அவர் அங்கு இந்த மாதம் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள Global Entrepreneurship Summit (GES) என்ற நிகழ்வில் பங்க கொள்ளவார். அவரின் வருகைக்காக அந்நகரை அழகுபடுத்தும் நோக்கில் அந்நகரில் உள்ள பிச்சைக்காரர்கள் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். . நேற்று வெள்ளிக்கிழமை வரை சுமார் 400 பிச்சைக்காரர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாகவும், மிகுதி பிச்சைக்காரர்களை அடைக்கும் பணி தொடர்வதாகவும் […]

இஸ்லாமியரை வதைத்த அதிகாரிக்கு 10 வருடங்கள்

புதிதாக அமெரிக்க இராணுவத்தில் இணைந்த இஸ்லாமிய இராணுவ உறுப்பினர்களை கடுமையாக துன்புறுத்திய Joseph Felix என்ற அமெரிக்க இராணுவத்தின் பயிற்சி அதிகாரிக்கு இராணுவ நீதிமன்றால் 10 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. . ஈராக் யுத்தத்தில் ஈடுபட்டிருந்த ஜோசெப்[h Flex, தற்போது South Carolina என்ற மாநிலத்தில் உள்ள Parris Island என்ற பயிற்சி முகாமில் (Marine boot camp) அதிகாரியாகவுள்ளார். அங்கு பயிற்சிக்காக சென்ற இஸ்லாமிய உறுப்பினர்களையே இவர் கடுமையாக துன்புறுத்தி உள்ளார். இவர்களை “பயங்கரவாதிகள்”, […]

லெபனான் உள்ளும் சவுதி-ஈரான் முரண்பாடு

நீண்ட காலமாக சுனி, சியா (Sunni, Shiite) இஸ்லாமியர்கள் தம்மிடையே மோதிவருகின்றனர். அந்நியர் சிலர் அந்த பிரிவினையை அவ்வப்போது தமக்கு சாதகமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். சுனி இஸ்லாமியராக சவுதிக்கும், சியா இஸ்லாமியராக ஈரானுக்கும் இடையே அவ்வகையான முரண்பாடு தற்போது முற்றி வருகிறது. அதற்கு அண்டிய நாடுகளும் பலியாகி வருகின்றன. . யெமன் (Yemen) நாட்டில் சவுதி-ஈரான் முரண்பாடு கொடூரமான யுத்தமாக மாறியுள்ளது. அவ்வகை குழப்பம் தற்போது லெபனானிலும் (Lebanon) தோன்றலாம் என்று அச்சப்பட வைக்கிறது. . கடந்த […]