2018 FIFA World Cup கனவை இழந்தது இத்தாலி

FIFA2018

2018 ஆண்டு இடம்பெறவுள்ள FIFA World Cup போட்டியின் இறுதி ஆட்டங்களுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது இத்தாலி. இதற்கு முன் 1958 ஆம் ஆண்டிலும் இத்தாலி FIFA World Cup இறுதி ஆட்டங்களுக்கு செல்லும் வாய்ப்பை இழந்திருந்திருந்தது. இத்தாலி முன்னர் 4 தடவைகள் FIFA World Cup வெற்றியை பெற்றிருந்த முக்கியதோர் உதைபந்தாட்ட நாடு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
.
சுவீடன் (Sweden) அணியும் இத்தாலி (Italy) அணியும் ஆடிய ஆட்டம் வெற்றி-தோல்வி இன்றி (0-0) முடிவடைந்ததால் இத்தாலி உலகக்கிண்ண இறுதி ஆட்டங்களுக்கு போகும் வாய்ப்பை இழந்துள்ளது. பதிலாக சுவீடன் இறுதி ஆட்டங்களில் பங்குகொள்ளும்.
.
இத்தாலிக்கு, சுவீடனுக்கும் இடையேயான இந்த போட்டி இத்தாலியின் San Siro நகரில், சுமார் 74,000 இத்தாலிய அணியின் ஆதரவாளர் முன் இடம்பெற்றது. அப்போதே இத்தாலி இந்த கவலைக்கிடமான முடிவுக்கு தள்ளப்பட்டது.
.
அமெரிக்கா, சிலே (Chile), நெதர்லாந்து ஆகிய முக்கிய உதைபந்தாட்ட நாடுகளும் 2018 போடியில் பங்குகொள்ள தவறியுள்ளன.
.
2018 ஆண்டுக்கான FIFA உலகக்கிண்ண போட்டிகள் ரஷ்யாவில் இடம்பெறும். 2022 ஆம் ஆண்டுக்கான போட்டிகள் கட்டாரில் (Qatar) இடம்பெறும்.
.