முன்னாள் புலிக்கு ஜெர்மனியில் சிறை தண்டனை

புலிகளுக்கு முன்னாளில் உளவுபார்த்த நவநீதன் (Navanithan G., வயது 39) என்பவருக்கு ஜெர்மனி நீதிமன்றம் 10 மாதகால சிறைத்தண்டனை தீர்ப்பை இன்று திங்கள்கிழமை வழங்கி உள்ளது. . 2005 ஆம் ஆண்டு முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொழும்பில் புலிகளால் படுகொலை செய்யப்படுவதற்கு நவநீதன் உடந்தையாக இருந்துள்ளார் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. வெளிநாட்டு பயங்கவாத குழுவில் உறுப்பினராக இருந்தமையை இவரின் குற்றமாகும். . 2012 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் அகதி நிலைக்கு விண்ணப்பித்த காலத்தில் தான் […]

தன்நாட்டை கொள்ளையடித்து ஆபிரிக்காவின் பணக்காரி

தன் நாட்டை கொள்ளையடித்து ஆபிரிக்காவின் முதல் பணக்காரி ஆகியுள்ளனர் Isabel dos Santos என்று தற்போது பகிரங்கத்துக்கு வந்த ஆவணங்கள் கூறுகின்றன. அங்கோலா (Angola) நாட்டை சுமார் 38 வருடங்கள் ஆண்ட முன்னாள் சனாதிபதி Jose Eduardo dos Santos என்பவரின் மூத்த மகளே Isabel. பிரித்தானியாவில் கல்வி கற்ற Isabel தற்போது கொள்ளையடித்த சொத்துக்களுடன் பிரித்தானியாவிலேயே வாழ்கிறார். இவரின் தற்போதை சொத்துக்களின் பெறுமதி சுமார் $2 பில்லியன் என்று கூறப்படுகிறது. . மேற்படி தகவல்களை BBC […]

ஹரி குடும்பம் அரச குடும்பத்துக்கு வெளியே

ஹரியும் (Price Harry), இராணியும் கொண்டுள்ள இணக்கப்படி ஹரியின் அனைத்து அரச சலுகைகளும் பறிக்கப்பட உள்ளன. அமெரிக்க பெண்ணான மேகன் (Meghan) என்பவரை திருமணம் செய்த டயானாவின் இளைய மகன் ஹரி அண்மையில் அரை தனிக்குடித்தனம் செல்ல முனைந்தார். ஆனால் இராணி ஹரியை முற்றாக அரச குடும்பத்தில் இருந்து வெளியேற்ற உள்ளார். இந்த அறிக்கை இன்று சனிக்கிழமை Buckingham Palace தரப்பால் வெளியிடப்பட்டு உள்ளது. . மேற்படி இணக்கப்படி ஹரி குடும்பம் வடஅமெரிக்காவில் சுதந்திரமான வாழக்கையை நடாத்தும். […]

ஈரான் தாக்குதலில் 11 அமெரிக்க படையினர் பாதிப்பு

ஜனவரி 8 ஆம் திகதி ஈரான் படையினர் ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஏவிய ஏவுகணைகளின் தாக்கத்தால் 11 அமெரிக்க படையினர் பாதிக்கப்பட்டு (concussion) உள்ளனர் என்று தற்போது அமெரிக்கா கூறுகிறது. மேற்படி தாக்குதலின் மறுதினம் அமெரிக்கர் எவரும் பாதிக்கப்படவில்லை என்றே ரம்ப் கூறி இருந்தார். . இந்த செய்தியை அமெரிக்க Captain Bill Urban வியாழன் தெரிவித்து உள்ளார். பாதிக்கப்பட்ட படையினருள் 8 பேர் ஜெர்மனியில் உள்ள Landstuhl Mediacl Center வைத்தியசாலைக்கும், 3 […]

ரஷ்ய அமைச்சரவையை கலைத்தார் பூட்டின்

நேற்று புதன் ரஷ்ய அமைச்சரவையை சனாதிபதி பூட்டின் கலைத்து உள்ளார். பூட்டினின் இந்த திடீர் நகர்வுக்கு கரணம் அறியாது தவிக்கிறது உலகம். தற்போதைய அரசியல் சாசனப்படி 2024 ஆம் ஆண்டில் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டிய பூட்டின் அதன் பின்னரும் பதவியில் இருக்க வழி செய்கிறார் என்று கருதுகின்றன மேற்கு நாடுகள். . நேற்று புதன்கிழமை பூட்டின் தனது அறிவிப்பை செய்த உடன் பூட்டினின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்த பிரதமர் Dmitri Medvedev வும் தனது அமைச்சரவையுடன் […]

அமெரிக்க-சீன தற்காலிக வர்த்தக உடன்பாடு

அமெரிக்காவும், சீனாவும் தற்காலிக வர்த்தக உடன்படிக்கை ஒன்றில் (Phase 1) இன்று புதன்கிழமை கையொப்பம் இட்டுள்ளன. அமெரிக்க சனாதிபதி ரம்பும், சீன அதிகாரி (Vice Premier) Liu He வும் இந்த உடன்படிக்கையில் கையொப்பம் இட்டுள்ளனர். . சுமார் 18 மாதங்களுக்கு முன் ரம்ப் சீனா மீதான பொருளாதார யுத்தத்தை ஆரம்பித்து இருந்தார். சீனா வேறு வழியின்றி தன்வழிக்கு வரும் என்று ரம்ப்  கருதினார். ஆனால் பொருளாதார யுத்தம் ரம்பின் எதிர்பார்ப்புக்கு அப்பால் இழுபட்டு சென்றது. இருபகுதியும் […]

ஈரான் அணு உடன்படிக்கை மரண படுக்கையில்

2015 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் சனாதிபதி ஒபாமா காலத்தில், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகள் ஈரானுடன் செய்து கொண்ட அணு உடன்படிக்கையான JCPOA இன்று மரண படுக்கை சென்றுள்ளது. இந்த உடன்படிக்கையின் இறுதி அத்தியாயத்தை பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகள் இன்று திங்கள் ஆரம்பித்து உள்ளன. . பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய மூன்று நாடுகளும் இன்று ‘dispute mechanism’ என்ற செயற்பாட்டை ஆரம்பித்து உள்ளன. இதன் உள்நோக்கம் ஈரான் […]

21 சவுதி படையினரை வெளியேற்றுகிறது அமெரிக்கா

அமெரிக்காவில் தங்கியிருந்து இராணுவ பயிற்சிகளை பெற்றுவந்த 21 சவுதி படையினரை அமெரிக்கா வெளியற்றுகிறது. இந்த அறிவிப்பை அமெரிக்கா இன்று திங்கள் வெளியிட்டு உள்ளது. . டிசம்பர் 6 ஆம் திகதி அமெரிக்காவில் பயிற்சி பெற்று வந்த இன்னோர் சவுதி படையினன் 3 அமெரிக்க படையினரை கொலை செய்து, 8 பேரை காயப்படுத்தியற்கும் இன்று வெளியேற்றப்படும் 21 பேருக்கும் இடையில் தொடர்பு எதுவும் இல்லை என்றாலும், மேற்படி 21 பேரும் ஆயுத குழுக்களின் (jihadist) பிரச்சார பிரதிகளை கொண்டிருந்தனர் […]

இந்தியாவில் தகர்க்கப்படும் சட்டவிரோத அடுக்குமாடிகள்

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் நான்கு புதிய அடுக்குமாடிகள் (high-rise apartments) அரசால் தகர்க்கப்பட்டு உள்ளன. கோச்சி பகுதியில் நேற்று 90 வீடுகளை கொண்ட The H2O Holy Faith என்ற 19 மாடி தகர்க்கப்பட்டு உள்ளது. அதன் பின்னர் Twin Towers என்ற அடுக்கு மாடியும் தகர்க்கப்பட்டு உள்ளது. மொத்தம் 40 வீடுகளை கொண்ட 17 அடுக்கு மாடியனா Golden Kayaloram இறுதியில் இன்று அழிக்கப்பட்டு உள்ளது. . மேற்படி அடுக்குமாடிகள் உரிய முறையில் அனுமதி பெறாது […]

அதிவிலை பிரித்தானிய வீட்டை சீனர் கொள்வனவு

லண்டன் நகரின் 2-8a Rutland Gate முகவரியில் உள்ள அரண்மனை போன்ற வீட்டை சீன செல்வந்தரான Cheung Chung Kiu கொள்வனவு செய்யவுள்ளார். மொத்தம் 45 அறைகளை கொண்ட இந்த வீட்டின் கொள்வனவு விலை £ 210 மில்லியன் (U$ 262 மில்லியன்). . அதன்படி பிரித்தானியாவில் மட்டுமன்றி, உலகத்திலேயே அதி கூடிய விலைக்கு கொள்வனவு செய்யப்படும் வீடு இதுவாகும். இதற்கு முன்னர் நியூ யார்க் நகரில் உள்ள அமெரிக்க வீடு ஒன்று $238 மில்லியன் விலைக்கு […]