Boeing 737 MAX விவகாரத்தால் அமெரிக்கவின் FAA இடரில்

FAA

அமெரிக்காவின் FAA (Federal Aviation Administration) திணைக்களத்தின் பிரதான தொழில்களில் ஒன்று அமெரிக்காவில் சேவைக்கு வரும் புதிய விமானங்களை சரிபார்த்து சான்றிதழ் செய்வதே. FAA சான்றிதழ் பெற்ற விமானங்கள் மட்டுமே அமெரிக்காவின் வானில் பறக்கலாம்.
.
தம்மால் பெரும் தொகை செலவழித்து தம் நாட்டுள் பறக்கும் விமானங்களுக்கு சான்றிதழ் வழங்க முடியாத நாடுகளும் அமெரிக்காவின் சான்றிதழை நம்பியே அந்த விமானங்களை கொள்வனவு செய்யும்.
.
பண பலம் கொண்ட Boeing தயாரித்த விமானங்களின் தராதரத்தை சுயமாக பரீட்சித்து உறுதி செய்யவேண்டிய FAA ஊழியர்கள் தமது கடமையை செய்யாது Boeing நிறுவனத்துடன் நெருங்கிய உறவை வளர்த்துவிட்டார்கள் என்று குற்றம் கூறப்படுகிறது. அதனாலேயே Boeing 737 MAX 8 விமானங்கள் குறைபாடுகளுடன் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்றும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
.
மேற்படி குற்றச்சாட்டுகளுக்கு இன்று பதிலளித்த FAA அதிகாரி Daniel Elwell தமது தொழிலை தரமாக செய்ய 10,000 ஊழியர்களும், $1.8 பில்லியன் பணமும் தேவை என்றுள்ளார்.
.
தற்போது FAA அமைப்பிடம் சுமார் 1,300 ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களில் 745 பேர் விமானங்களை பரீட்சிக்கும் விமானிகள், பொறியியலாளர், திருத்துவோர். அத்துடன் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை $239 மில்லியன் மட்டுமே.
.