பங்களாதேச தொழிற்சாலை தீக்கு 52 பேர் பலி

பங்களாதேச தொழிற்சாலை தீக்கு 52 பேர் பலி

பங்களாதேசத்து தொழிற்சாலை தீவிபத்து ஒன்றுக்கு குறைந்தது 52 பேர் பலியாகி உள்ளனர். Hashem Food and Beverage என்ற தொழிற்சாலையில் இடம்பெற்ற இந்த தீக்கு மேலும் 30 பேர் காயமடைந்தும் உள்ளனர். மேலும் சிலர் தற்போதும் இருப்பிடம் அறியப்படாது உள்ளனர். தலைநகர் டாக்காவில் இருந்து 25 km கிழக்கே உள்ள Rupgani என்ற இடத்தில் உள்ள இந்த 6 மாடி தொழிற்சாலை நூடில்ஸ், அடைக்கப்பட்ட குளிர்பானம் ஆகியன தயாரிக்கும் தொழிற்சாலையாகும். இந்த தீ உள்ளூர் நேரப்படி வியாழன் […]

ஹெயிற்ரி சனாதிபதியை சுட்டு கொன்றது கைக்கூலிகள்?

ஹெயிற்ரி சனாதிபதியை சுட்டு கொன்றது கைக்கூலிகள்?

ஹெயிற்ரி (Haiti) என்ற மத்திய அமெரிக்காவின் கிழக்கே உள்ள நாட்டின் சனாதிபதி Jovenel Moise, வயது 53, அவரது வீட்டில் வைத்து புதன் அதிகாலை 1:00 மணிக்கு துப்பாக்கி குழு ஒன்றால் சுட்டு கொலை செய்யப்பட்டு இருந்தார். அவரின் உடலில் 12 துப்பாக்கி சூட்டு காயங்கள் இருந்தன. அவரின் மனைவியும் காயமடைந்து இருந்தார். ஹெயிற்ரி போலீசாரின் அறிக்கைபடி 26 கொலம்பியா நாட்டவரும், 2 அமெரிக்கரும் இந்த தாக்குதலை செய்து உள்ளனர். அமெரிக்கர் இருவரும் ஹெயிற்ரியில் பிறந்து, அமெரிக்கா […]

இந்தியாவில் 39% மக்களே சைவம் உண்போர்

இந்தியாவில் 39% மக்களே சைவம் உண்போர்

பெரும்பான்மையாக இந்துக்களை கொண்ட இந்தியாவில் தற்போது சுமார் 39% மக்கள் மட்டுமே சைவ உணவுகளை மட்டும் உண்போராக (vegetarians) உள்ளனர் என்கிறது அமெரிக்காவை தளமாக கொண்ட PEW research center என்ற ஆய்வு அமைப்பு. இந்திய அரசியலில் இந்துவாதம் பெருகினாலும், இந்திய அடுக்களையுள் மாமிசம் வேகமாக பரவி வருகிறது. இந்திய இந்துக்களை மட்டும் கருத்தில் கொண்டால், 44% இந்துக்கள் மட்டுமே சைவம் மட்டும் உண்போராக உள்ளனர். மத அடிப்படியில் நோக்கிகினால் சுமார் 92% ஜெயின் மதத்தவரும், சுமார் […]

முன்னாள் தென்னாபிரிக்க சனாதிபதி சூமா சரண்

முன்னாள் தென்னாபிரிக்க சனாதிபதி சூமா சரண்

தென்னாபிரிக்காவின் முன்னாள் சனாதிபதி சூமா (Jacob Zuma, வயது 79) இன்று புதன் மாலை சிறை அதிகாரிகளிடம் சரணடைந்து உள்ளார். சரணடைந்த இவர் தனது 15 மாத கால சிறை தண்டனையை ஆரம்பிப்பார். இவர் மீது சுமத்தப்பட்ட ஊழல் வழக்குக்கு ஒன்று கடந்த கிழமை இடம்பெற்றது. ஆனால் சூமா அந்த வழக்கு விசாரணைக்கு செல்லவில்லை. அதனால் அவர் நீதிமன்றத்தை உதாசீனம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் 15 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. தண்டனைப்படி சூமா ஞாயிறு […]

மோதி அமைச்சரவையில் பெரு மாற்றம், அளவும் பெரிது

மோதி அமைச்சரவையில் பெரு மாற்றம், அளவும் பெரிது

இன்று புதன்கிழமை இந்திய பிரதமர் மோதி தனது அமைச்சரவையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார். அமைச்சரவையின் அளவும் ஊதி பெருத்துள்ளது. இதுவரை 52 அமைச்சர்களை மட்டுமே கொண்டிருந்த அமைச்சரவை தற்போது 77 அமைச்சர்களை கொண்டதாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதாவது புதிதாக 25 அமைச்சுகள் உருவாக்கப்பட்டு உள்ளன. அது சுமார் 48% அதிகரிப்பு. அத்துடன் சுமார் 12 பழைய அமைச்சர்கள் விரட்டப்பட்டு, புதியவர்கள் அமைச்சர்கள் ஆக்கப்பட்டும் உள்ளனர். அதனால் புதிய அமைச்சரவையில் சுமார் 37 பேர் புதியவர்கள் ஆக […]

அமெரிக்காவில் புதையும் இன்னோர் மாடி

அமெரிக்காவில் புதையும் இன்னோர் மாடி

அண்மையில் அமெரிக்காவின் கிழக்கே உள்ள Florida மாநிலத்தில் Surfside என்ற குடியிருப்பு மாடி உடைந்து வீழ்ந்ததால் 28 பேர் மரணமாகியும், 117 பேர் தற்போதும் இருப்பிடம் அறியப்படாதும் உள்ளனர். அதேவேளை அமெரிக்காவின் மேற்கே உள்ள California மாநிலத்து San Francisco நகரிலும் உயர்ந்த மாடி ஒன்று குடியிருப்போரை பயமுறுத்துகிறது. 2009ம் ஆண்டு கட்டப்பட்ட Millennium Tower என்ற 58 அடுக்குகளையும், 605 அடி உயரத்தையும் கொண்ட குடியிருப்பு மாடி இதுவரை 18 அங்குலத்தால் நிலத்துள் புதைந்து உள்ளது. […]

ஆப்கான் இராணுவம் அண்டை நாடுகளுக்கு தப்பி ஓட்டம்

ஆப்கான் இராணுவம் அண்டை நாடுகளுக்கு தப்பி ஓட்டம்

அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய பின் தமது பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை என்று கருதும் சுமார் 1,600 ஆப்கானிஸ்தான் படையினர் ரெஜிகிஸ்தான் (Tajikistan) என்ற வடகிழக்கு எல்லையோர நாட்டுக்கு தப்பி ஓடியுள்ளனர். உள்ளூர் நேரப்படி திங்கள் காலையும் சிலர் தமது நாட்டுக்கு வந்துள்ளதாக Tajikistan National Security Committee கூறியுள்ளது. வேறு சிலர் பாகிஸ்தான், உஸ்பேக்கிஸ்தான் (Uzbekistan) ஆகிய எல்லையோர நாடுகளுக்கு ஓடி உள்ளனர். ​கடந்த 20 ஆண்டுகளாக தலபானுடன் போராடி, முழுமையான வெற்றி பெற […]

​பிலிப்பீன்ஸ் விமான விபத்துக்கு 50 படையினர் பலி

​பிலிப்பீன்ஸ் விமான விபத்துக்கு 50 படையினர் பலி

பிலிப்பீன் விமான படைக்கு சொந்தமான Lockheed C-130 வகை விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் குறைந்தது 50 பேர் பலியாகியும், சிலர் காயமடைந்தும் உள்ளனர். நிலத்தில் இருந்த 3 பொதுமக்களும் பலியானோருள் அடங்குவர். Hercules என்றழைக்கப்படும் மேற்படி விமானம் தரை இறங்குவதற்கு பிந்தியதால், மிகுதி ஓடுபாதை போதுமானதாக இல்லாமலிருக்கும் என்ற காரணத்தால் விமானி மீண்டும் அந்த விமானத்தை மேலே ஏற்ற முயன்றுள்ளார். ஆனால் போதிய உந்தம் இல்லாத காரணத்தால் விமானம் ஊடுபாதைக்கு அப்பால் சென்று மரங்களுடன் மோதி […]

இந்தியாவில் வேகமாக பரவும் ஆங்கில மோகம்

இந்தியாவில் வேகமாக பரவும் ஆங்கில மோகம்

இந்திய பாடசாலைகளில் ஆங்கிலம் மூலம் கல்வி கற்போர் தொகை வேகமாக அதிகரித்து வருகிறது என்று அறிய வைக்கிறது 2019/2020 கல்வி ஆண்டுக்கான UDISE (Unified District Information System for Education) என்ற அமைப்பின் தரவுகள். தேசிய அளவில் ஹிந்தி மூலம் கற்போர் அளவு 42% ஆக இருந்தாலும், ஆங்கிலம் மூலம் கற்போர் அளவு 25% க்கும் அதிகமாக அதிகரித்து உள்ளது. பெரும்பாலான​ தெற்கு மாநிலங்களிலும், ​ ​புஞ்சாப், ஹரியானா, டெல்லி போன்ற மாநிலங்களிலும் ஆங்கிலம் மூலம் […]

மீண்டுமொரு பாரிய இணைய தாக்குதல்

மீண்டுமொரு பாரிய இணைய தாக்குதல்

இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் ஓரு பாரிய இணைய தாக்குதல் (ransomware attack) இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை தளமாக கொண்ட Kaseya என்ற நிறுவனத்தின் VSA என்ற software ஒன்றில் உள்ள குறைபாட்டை அறிந்த தாக்குதல் குழு அந்த software ஐ பயன்படுத்தும் நிறுவனங்களை தாக்கி உள்ளது. உலக அளவில் Kaseya நிறுவனத்தின் software களை சுமார் 40,000 சிறிய, பெரிய நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. இந்த குழுவே அண்மையில் JBS Foods என்ற இறைச்சி விற்பனை நிறுவனத்தை […]