கனடாவில் வாகனத்தால் மோதி 4 முஸ்லிம்கள் கொலை

கனடாவில் வாகனத்தால் மோதி 4 முஸ்லிம்கள் கொலை

கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள London என்ற நகரில் 4 முஸ்லிம்கள் வாகனத்தால் மோதி கொலை செய்யப்பட்டு உள்ளனர். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். இந்த தாக்குதல் நேற்று ஞாயிறு இரவு 8:40 மணியளவில் இடம்பெற்றது. London நகரம் Toronto நகருக்கு மேற்கே சுமார் 200 km தூரத்தில் உள்ளது. Nathanial Veltman என்ற 20 வயது சந்தேகநபர் உடனேயே கைது செய்யப்பட்டு உள்ளார். இது ஒரு திட்டமிட்ட படுகொலை என்றும், Veltman மீது பயங்கரவாத […]

கனடாவில் Ryerson சிலையும் உடைப்பு

கனடாவில் Ryerson சிலையும் உடைப்பு

இன்று ஞாயிறு கனடாவின் Toronto நகரில் உள்ள Ryerson University வளாகத்தில் இருந்த Egerton Ryerson (1803 – 1882) என்பவரின் சிலையும் உடைக்கப்பட்டது. தற்கால கனடாவின் பொது கல்வி முறைமைக்கு இவரின் பங்கு பிரதானமானது என்றாலும், கனடாவின் ஆதிக்குடியினரின் குழந்தைகளை பலவந்தமாக அவர்களின் குடும்பங்களில் இருந்து பிரித்தெடுத்து கிறீஸ்தவ residential பாடசாலைகளை உருவாக்கவும் இவர் காரணமாக இருந்தார். இந்த பாடசாலைகளின் நோக்கம் ஆதிக்குடியினரை அவர்களின் கலாச்சாரங்களில் இருந்து பிரித்து கிறீஸ்தவ மற்றும் ஐரோப்பிய கலாச்சாரங்களில் இணைப்பதே. […]

G7 நாடுகள் குறைந்தது 15% வரி வசூலிக்க இணக்கம்

G7 நாடுகள் குறைந்தது 15% வரி வசூலிக்க இணக்கம்

உலக அளவில் இயங்கும் நிறுவனங்கள் மீது குறைந்தது 15% வருமான வரி நடைமுறை செய்ய G7 நாடுகள் இன்று சனிக்கிழமை இணங்கி உள்ளன. இந்த இணக்கம் குறிப்பாக பல நாடுகளில் இயங்கும் Apple, Facebook, Amazon, Microsoft, Twitter போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களை கருத்தில் கொண்டதே. அயர்லாந்து போன்ற சில நாடுகள் பன்னாட்டு நிறுவனங்களில் இருந்து வருமானத்தை பெறும் நோக்கில் அவ்வகை நிறுவனங்களுக்கு குறைந்த வரியை தற்போது அறவிடுகின்றன. பன்னாட்டு நிறுவனங்களும் பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி போன்ற […]

இலச்சத்தீவிலும் ப.ஜா. இந்துவாத ஊடுருவல்

இலச்சத்தீவிலும் ப.ஜா. இந்துவாத ஊடுருவல்

சுமார் 64,000 மக்கள் வாழும் இலச்சத்தீவில் (Lakshadweep) கடந்த டிசம்பர் மாதம்வரை கரோனா தோற்றாளர் எவரும் இருந்திருக்கவில்லை. ஆனால் தற்போது அங்கு சுமார் 10% மக்களுக்கு கரோனா தொற்றி உள்ளது. அதற்கு பிரதமர் மோதியால் அந்த யூனியன் பிரதேசத்துக்கு அனுப்பப்பட்ட Praful Khoda Patel என்ற உயர் அதிகாரியே காரணம் என்று கூறப்படுகிறது. டிசம்பர் வரை அங்குள்ள 36 தீவுக்குகளுக்கு செல்லும் அனைவருக்கும் கரோனா தனிமைப்படுத்தல் முறைமை இருந்து வந்தது. ஆனால் டிசம்பர் மாதம் 2ம் திகதி […]

சீனாவில் உலகின் இரண்டாவது பெரிய நீர்மின் அணை

சீனாவில் உலகின் இரண்டாவது பெரிய நீர்மின் அணை

உலகத்தின் இரண்டாவது பெரிய நீர்மின் அணைக்கட்டான சீனாவில் உள்ள Baihetan நீர்மின் அணைக்கட்டு ஜூலை 1ம் திகதி முதல் மின்னை உற்பத்தி செய்யவுள்ளது. இதில் உள்ள 16 மின் பிறப்பாக்கிகள் மொத்தம் 16,000 மெகாவாட் (MW) மின்னை உற்பத்தி செய்யும். உலகத்தில் முதலாவது பெரிய நீர்மின் அணைக்கட்டான சீனாவின் Three Gorges Dam மொத்தம் 22,500 MW மின்னை உற்பத்தி செய்கிறது. சுமார் $6.3 பில்லியன் செலவில் அமைக்கப்பட்ட Baihetan அணை 289 மீட்டர் உயரம் கொண்டது. […]

இஸ்ரேலில் 12 ஆண்டுகளின் பின் புதிய பிரதமர்

இஸ்ரேலில் 12 ஆண்டுகளின் பின் புதிய பிரதமர்

கடந்த 12 ஆண்டுகளாக இஸ்ரேலில் ஆட்சி செய்த நெட்டன்யாகு (Benjamin Netanyahu) தனது பிரதமர் பதவியை இழக்கும் நிலையில் உள்ளார். இவரை பதவியில் இருந்து நீக்கும் ஓரே கொள்கையில் இடதுசாரி, வலதுசாரி, நடுநிலை மற்றும் அரபு கட்சிகள் இணைந்தே நெட்டன்யாகுவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் இஸ்ரேலில் 4 தேர்தல்கள் இடம்பெற்றன. ஆனால் ஒரு கட்சியும் ஆட்சி அமைக்க தேவையான ஆசனங்களை பெற்று இருக்கவில்லை. அதனால் நெட்டன்யாகுவே தொடர்ந்தும் இடைக்கால பிரதமர் […]

தீ மூண்ட X-Press Pearl கப்பல் தாழ்கிறது

தீ மூண்ட X-Press Pearl கப்பல் தாழ்கிறது

கடந்த 10 தினங்களாக தீக்கு இரையாகி வந்திருந்த X-Press Pearl என்ற 186 மீட்டர் நீள கப்பல் கடலுள் தாழ ஆரம்பித்து உள்ளது. தாழும் இந்த கப்பலில் இருந்து வெறியேறும் நச்சு எண்ணெய்கள் இப்பகுதி கடல் வாழ் உயிரினத்தையும், கரையோரத்தையும் கடுமையாக பாதிக்கும். இந்த கப்பல் கொழும்புக்கும், நீர்கொழும்புக்கும் இடைப்பட்ட கடலில் தாழ்கிறது. இதை நாடுகடலுக்கு இழுக்கும் முயற்சிகளும் நடைபெறுகின்றன. இந்த கப்பலில் உள்ள 25 தொன் nitric அமிலமும், மற்றைய இரசாயனங்களும் இப்பகுதி கடலுக்கு நீண்டகால […]

JBS இறைச்சி நிறுனத்தின் மீதும் இணைய தாக்குதல்

JBS இறைச்சி நிறுனத்தின் மீதும் இணைய தாக்குதல்

உலகின் மிகப்பெரிய இறைச்சி நிறுவனமான JBS மீதும் இணையம் மூலமான தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அதனால் இந்த நிறுவனத்தின் அஸ்ரேலிய, அமெரிக்க, கனடிய தொழிற்சாலை பணிகள் இடைநிறுத்தப்பட்டு உள்ளன. மொத்தம் 15 நாடுகளில் இயங்கும் இந்த நிறுவனத்திடம் உள்ள 150 தொழிற்சாலைகளில் சுமார் 150,000 பேர் பணியாற்றுகின்றனர். இந்த தாக்குதலையும் ரஷ்யாவை தளமாக கொண்ட குழு ஒன்றே செய்துள்ளதாக கூறப்படுகிறது. Ransomware software மூலம் தாக்கும் இந்த குழு JBS நிறுவனத்தின் கணணிகளின் தரவுகள், ஆவணங்கள் அனைத்தையும் encrypt […]

அமெரிக்காவில் சீன பெண் போலீஸ் மீதும் தாக்குதல்

அமெரிக்காவில் சீன பெண் போலீஸ் மீதும் தாக்குதல்

ரம்ப் ஆட்சி காலத்திலும் , அதன் பின்னரான காலத்திலும் அமெரிக்காவில் சீனர்கள் மீதும், சீனர்கள் போல் தோற்றமளிப்போர் மீதும் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. ஆனால் இன்று செவ்வாய்க்கிழமை ஒரு சீன பெண் போலீசார் மீதும் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் பிரான்சிஸ்கோ (San Francisco) நகரில் ஒருவர் மக்களை வீதியில் மிரட்டுவதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. அதை விசாரிக்க அண்மையில் இருந்த போலீசார் ஒருவர் விரைந்துள்ளார். அவர் ஒரு சீன பெண். மக்களை மிரட்டியவரை போலீசார் […]

ஆப்கானிஸ்தானை நீங்கும் அமெரிக்க படைகள் பாகிஸ்தானில்

ஆப்கானிஸ்தானை நீங்கும் அமெரிக்க படைகள் பாகிஸ்தானில்

சுமார் 20 ஆண்டுகளுக்கு பின் திடமான வெற்றி இன்றிய நிலையில் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற ஆரம்பித்தாலும், சில படைகள் பாகிஸ்தான் தளம் ஒன்றில் நிலைகொள்ளும் என்று கூறப்படுகிறது. அத்துடன் நிலத்தால் சூழப்பட்ட (landlocked) ஆப்கானிஸ்தானில் உள்ள தலபானை தாக்க பாகிஸ்தானின் வான் வழியை அமெரிக்கா தொடர்ந்தும் பயன்படுத்தும். இந்த உண்மையை பாகிஸ்தான் அரசு தன் மக்களுக்கு தெரிவிக்காத நிலையில், அமெரிக்காவின் செனட் குழு ஒன்றுக்கு வழங்கிய அமர்வு ஒன்றில் இந்த உண்மையை வெளியிடப்பட்டு உள்ளது. […]