UK Manchester அரங்கில் குண்டு தாக்குதல்

Manchester

பிரித்தானிய Manchester நகரில் உள்ள Manchester அரங்கில் இன்று திங்கள் இரவு10:45 மணியளவில் இடம்பெற்ற குண்டு தாக்குதல் ஓன்றுக்கு பலர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இன்று மாலை அந்த அரங்கில் 23 வயதுடைய பிரபல அமெரிக்க பாடகியான அரியானா கிராண்டே (Ariana Grande) நடாத்திய நிகழ்வு ஒன்றின்போதே இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
.
பலர் கொல்லப்பட்டும், பலர் காயமடைந்து உள்ளதாக Manchester போலீசார் கூறி இருந்தாலும், பலியானோர், காயமடைந்தோர் தொகைகள் தற்போது வெயிடப்படவில்லை. அரியானாவுக்கும் எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் கூறப்பட்டு உள்ளது.
.
இந்த அரங்கு 21,000 மக்களை கொள்ளக்கூடியது.
.

அப்பகுதியில் உள்ள Wythenshawe வைத்தியசாலை அவசர சிகிச்சை தேவை அல்லாதோரை வைத்தியசாலையை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளது.
.