அஸ்ரேலியாவில் பல்லாயிரம் தீயால் கடற்கரையில் முடக்கம்

AusFire

அஸ்ரேலியாவின் தென்கிழக்கே பரவி வரும் காட்டு தீ காரணமாக சுமார் 4,000 மக்கள் அப்பகுதி கடற்கரையில் முடக்கப்பட்டு உள்ளனர் என்று Victoria நகரின் அவசரகால சேவை அதிகாரியான Andrew Crisp இன்று செவ்வாய் கூறியுள்ளார்.
.
சிலர் வளங்கள் மூலம் கடலுக்குள்ளும் சென்று தம்மை பாதுகாத்துள்ளனர். இங்குள்ள சில கடற்கரைகள் உல்லாச பயணிகளால் நிரம்பியுள்ள கோடை காலம் இது.
.
Melbourne பகுதியில் சுமார் 100,000 மக்கள் நேற்று திங்கள் வேறு இடங்களுக்கு நகர்த்தப்பட்டு உள்ளனர்.
.
அக்டோபர் மாதம் முதல் சுமார் 34,000 சதுர km பரப்பளவு தீக்கு இரையாகி உள்ளது. அத்துடன் சுமார் 1,000 வீடுகளும் தீக்கு இரையாகி உள்ளன. குறைந்தது 12 பேர் பலியாகியும் உள்ளனர்.
.
சுமார் ஒரு வருடத்துக்கு முன்னரேயே Tasman கடல் வளமையிலும் 1.66 C அதிக வெப்பநிலையில் இருந்துள்ளது என்று அந்நாட்டு Bureau of Meteorology கூறியுள்ளது.
.