ஆச்சேயில் நிலநடுக்கம், 25 பேர் பாலி

Aceh

இந்தோனேசியாவின் சுமத்திரா தீவின் வடபகுதியில் உள்ள ஆச்சேயில் (Aceh) புதன் காலை 5:00 மணியளவில் இடம்பெற்ற நிலநடுக்கத்துக்கு 25 பேருக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். அமெரிக்க Geological Survey அமைப்பின் கணிப்பின்படி 6.5 அளவிலான நடுக்கம், நிலத்துக்கு கீழ் 17.2 km ஆழத்தில் இடம்பெற்று உள்ளது. மேலும் பலர் இடிபாடுகளுள் அகப்பட்டும் இருக்கலாம் என்று க்கூறப்படு உள்ளது.
.
சுனாமி ஆபத்து இல்லை என்றும் கூறப்படு உள்ளது.
.
2004 ஆம் ஆண்டு இவ்விடத்தில் இடம்பெற்ற 9.1 அளவிலான நடுக்கத்துக்கு சுமார் 230,000 மக்கள் சுற்றிவர உள்ள நாடுகளில் பலியாகி இருந்தனர். இந்தோனேசியாவில் மட்டும் 160,000 மக்கள் பலியாகி இருந்தனர்.
.
இப்பகுதி இந்து-ஆஸ்திரேலியான் புவி ஓடும், Eurasian புவி ஓடும் சந்திக்கும் இடம் (Ring of Fire) ஆகையால் நிலநடுக்கம் இங்கு அதிகம் இடம்பெறும்.
.