ஆப்கானிஸ்தான் குண்டுக்கு 62 பேர் பலி

Afhanistan

இன்று வெள்ளி ஆப்கானிஸ்தான் மசூதி ஒன்றில் இடம்பெற்ற குண்டு தாக்குதலுக்கு குறைந்தது 62 பேர் பலியாகி உள்ளனர். அத்துடன் குறைந்தது 36 பேர் காயமடைந்தும் உள்ளார். தாக்குதல் இடம்பெற்ற மசூதி உள்ள மாநிலம் பாகிஸ்தான் எல்லையோரம் உள்ளது.
.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை கொண்டாடவில்லை. இப்பகுதியில் தலபானும், ISIS குழுவும் வெளிப்படையாக செயல்படுகின்றன.
.
ஐ. நா. கணிப்புப்படி ஆப்கானிஸ்தானில் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மூன்று மாத காலத்தில் 1,174 பொதுமக்கள் தாக்குதல்களுக்கு பலியாகி உள்ளார்.
.​
​ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலுக்கு அங்கு 162 பேர் பலியாகி இருந்தனர். ஆகஸ்ட் 18 ஆம் திகதி தாக்குதலுக்கு 92 பேர் பலியாகி இருந்தனர். ஆகஸ்ட் 11 ஆம் திகதி தாக்குதலுக்கு 13 பேர் பலியாகி இருந்தனர்.
.