இந்தியாவின் இந்துவாத CAB குடிவரவு சட்டத்தால் கலவரங்கள்

Assam

இந்த கிழமை இந்தியாவில் சட்டமாக்கப்பட்ட Citizenship Amendment Bill (CAB) என்ற சட்டத்தால் அங்கு பல இடங்களில் கலவரங்கள் இடம்பெறுள்ளன. குறிப்பாக இஸ்லாமியர்களை அதிகமாக கொண்ட, பங்களாதேசத்தின் எல்லையோர மாநிலமான, அசாம் மாநிலம் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளது.
.
அங்கு இடம்பெறும் கலவரங்களுக்கு இதுவரை 2 பேர் பலியாகி உள்ளார். மேலும் பலர் காயமனடைந்தும் உள்ளனர். கலவரங்களை அடக்க 26 இந்திய படையணிகள் அசாமுக்கும், 3 படையணிகள் திரிபுராவுக்கும் அனுப்பப்பட்டு உள்ளனர்.
.
பெருமளவு பங்களாதேச இஸ்லாமியர் அசாம் மாநிலத்துக்கு இடம்பெயர்ந்து உள்ளனர். அதில் பங்களாதேச சுதந்தரத்துக்கு (1971) முன்னர் வந்தோரும், பின்னர் வந்தோரும் அடங்குவர். அசாமில் 1/3 பங்கு மக்கள் இஸ்லாமியர் என்று கூறப்படுகிறது. காஸ்மீருக்கு அடுத்ததாக இஸ்லாமியரை அதிகம் கொண்ட மாநிலம் அசாம் ஆகும்.
.
அதேவேளை இஸ்லாமியரை அதிகம் கொண்ட பங்களாதேசத்தில் சுமார் 16 மில்லியன் இந்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
.
புதிய CAB சட்டப்படி பாகிஸ்தான், பங்களாதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் இஸ்லாமியர் அல்லாதோர்க்கு இந்தியா குடியிருமை வழங்கும். இந்த சட்டம் இஸ்லாமியரை திட்டமிட்டு தவிர்த்தால் பா.ஜ. கட்சி எடுத்த இஸ்லாம் விரோத சட்டமாகவே இது கருதப்படுகிறது.
.
இந்துவாத மோதி அரசு ஒரு மாதத்தின் முன் காஸ்மீரின் மேலதிக உரிமைகளையும் பறித்து, மத்திய அரசின் நேரடி ஆட்சிக்குள் கொண்டுவந்திருந்தது.
.
இந்த சட்டத்தில் இலங்கையில் இருந்து சென்ற இந்து தமிழர்களும் கருத்தில் கொள்ளப்படவில்லை.
.