இந்தியாவில் கொடுமையான வெப்பம்

India

கடந்த சில நாட்களாக இந்தியாவின் பல பாகங்களில் வெப்பநிலை கொடுமையாக உள்ளது. இதன் காரணமாக மக்களை தேநீர் போன்ற சூடான பானங்களை அருந்த வேண்டாம் என்று கேட்டுள்ளது அரசு. பதிலாக குளிர் பானங்களை அருந்தவும், பழங்களை உண்ணவும் மக்கள் கேட்கப்பட்டு உள்ளனர்.
.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள Churu என்ற நகரிலேயே அதி கூடிய வெப்பநிலை பதிவாகி உள்ளது. கடந்த சனிக்கிழமை இங்கு வெப்பநிலை 50.6 C ஆக இருந்துள்ளது. திங்கள் வெப்பநிலை 50.3 C ஆகவும், செவ்வாய் 48.0 C ஆகவும் இருந்துள்ளது.
.
டெல்கியில் கடந்த ஞாயிறு வெப்பநிலை 44.6 சி ஆக இருந்துள்ளது.
.
தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் வெப்ப கொடுமைக்கு 17 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
.
கடந்த 65 வருடகால தரவுகளின்படி இந்தியாவில் இந்த வருட வெப்ப கொடுமை இரண்டாம் இடத்தில் உள்ளது.

.