இந்தியாவும் பாகிஸ்தானும் இந்திய நேரப்படி சனிக்கிழமை மாலை 5:00 மணி முதல் உடனடி யுத்த நிறுத்தத்துக்கு இணங்கி உள்ளன. இந்த இணைக்கப்படி தரை, ஆகாய, கடல் தாக்குதல் அனைத்தும் நிறுத்தப்படும்.
இந்த யுத்த நிறுத்தத்துக்கு அமெரிக்காவின் பங்கு பிரதானம் என்று பாகிஸ்தான் அறிவித்தாலும், இதில் அமெரிக்காவின் பங்கு இல்லை என்கிறது இந்தியா. சில தினங்களுக்கு முன்னரே அமெரிக்க உதவி சனாதிபதி இது தங்களின் யுத்தம் இல்லை என்று கூறியிருந்தார்.
யுத்த நிறுத்தம் காரணமாக பாகிஸ்தான் மீண்டும் தனது வான்பரப்பை அனைத்து விமானங்களின் பயன்பாட்டுக்கு விட்டுள்ளது. ஆனாலும் விமானங்கள் தொடர்ந்தும் இந்த வான்பரப்பை தவிர்த்து வருகின்றன.

கடந்த கிழமை இரு தரப்பும் பலத்த அழிவுகளை சந்தித்துள்ளன, ஆனால் அழிவு விபரங்கள் இதுவரை முழுமையாக வெளியிடப்படவில்லை.