இலங்கை McDonald’s மூடப்பட்டது, சுகாதாரம் கேள்வியில்

இலங்கை McDonald’s மூடப்பட்டது, சுகாதாரம் கேள்வியில்

The Commercial High Court of Colombo விடுத்த உத்தரவுக்கு அமைய இலங்கை McDonald’s உணவகங்கள் அனைத்தும் இன்று ஞாயிறு முதல் மறு ஏப்ரல் 4ம் திகதி வரை மூடப்படுகின்றன. 

இலங்கை கிளைகளுக்கான உரிமை எடுத்து இயக்கும் (franchise) Abans PLC இந்த கிளைகளில் சர்வதேச தரத்திலான சுகாதார முறைமைகளை நடைமுறை செய்யவில்லை என்று அமெரிக்க தாய் நிறுவனம் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

தற்போது 12 McDonald’s உணவகங்கள் இலங்கையில் Abans நிறுவனத்தால் இயக்கப்படுகின்றன. இவை கொட்டாஞ்சேனை, நுகேகொட, கிரிபத்கொட, பத்தரமுள்ள, கொள்ளுப்பிட்டி, ராஜகிரிய, வெலிசர, Mount Lavinia, City Centre, Shangri La ஆகிய இடங்களில் உள்ளன. 

அமெரிக்காவின் McDonald’s உணவகம் 1998ம் ஆண்டு முதல் இலங்கையில் இயங்குகிறது.