ஈரானில் தாக்குதல், 12 பேர் பலி, சவுதி காரணம்?

Iran

ஈரானில் இன்று புதன் காலை இடம்பெற்ற இரண்டு தாக்குதல்களுக்கு 12 பேர் பலியாகியும், மேலும் 42 பேர் காயமடைந்தும் உள்ளனர். மூன்றாவது தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும் ஈரான் புலனாய்வு அமைச்சு கூறியுள்ளது.
.
ஒரு தாக்குதல் Imam Khomeini’s நினைவாலயத்திலும் மற்றைய தாக்குதல் ஈரான் பாராளுமன்றத்திலும் இடம்பெற்று உள்ளன. தலைநகர் தெகிரானில் உள்ள இந்த இரண்டு இடங்களும் சுமார் 20 km இடைவெளியில் உள்ளன. குறைந்தது ஒரு தற்கொலை தாக்குதல்காரரும் பங்கு கொண்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
.
ஈரானின் Islamic Revolutionary Guard இந்த தாக்குதல் சவுதியினதும், அமெரிக்காவினதும் வேலை என்று கூறியதாக செய்திகள் கூறுகின்றன.
.
அதேவேளை IS குழு இந்த தாக்குதலுக்கு உரிமை கொண்டுள்ளது. ஈராக்கில் இடம்பெறும் IS குழுவுக்கு எதிரான யுத்தத்தில் ஈரான் முன் உள்ளது. ஈரானும், ஈராக்கின் பெரும்பான்மையும் சியா இஸ்லாமியர் ஆவர். IS பெரும்பாலும் சுனி இஸ்லாமியர் ஆவர்.
.

ஈரானில் இன்று இடம்பெற்ற தாக்குதலுக்கு அமெரிக்காவின் வெளியுறவு திணைக்களம் அனுதாபம் தெரிவித்து உள்ளது.
.