உணவுக்கு கூடிய அகதிகளை இஸ்ரேல் தாக்கி 104 பேர் பலி

உணவுக்கு கூடிய அகதிகளை இஸ்ரேல் தாக்கி 104 பேர் பலி

காசாவில் அகதிகளுக்கு உணவு வழங்க வந்த வண்டிகளை சுற்றி இருந்தோரை இஸ்ரேல் இராணுவம் சுட்டதால் ஏற்பட்ட குழப்பத்தில் 104 பேர் பலியாகியும், 760 பேர் காயமடைந்தும் உள்ளனர்.

அகதிகள் மீது தனது படைகள் சுட்டதை ஏற்றுக்கொண்ட இஸ்ரேல் சம்பவத்தை தாம் விசாரணை செய்வதாக கூறியுள்ளது.

துப்பாக்கி சூடுகளில் இருந்து தப்பி ஓட முனைந்த உணவு வண்டிகளும் சிலரை மோதி கொலை செய்துள்ளன என்றும் கூறப்படுகிறது.

இஸ்ரேலின் இந்த தாக்குதலை “gross violation of international humanitarian laws and our humanity” என்று சாட்டியுள்ளது Oxfam International.