எகிப்து மசூதி தாக்குதலுக்கு 235 பேர் வரை பலி

Egypt

எகிப்தின் சைனாய் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் இடம்பெற்ற குண்டு, மற்றும் துப்பாக்கி தாக்குதல்களுக்கு குறைந்தது 235 பேர் பலியாகியும், மேலும் 100 வரை காயப்பட்டும் உள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை மசூதியில் வழிபாடுகள் இடம்பெற்ற வேளையிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
.
எகிப்தின் சைனாய் பகுதியில் உள்ள El Arish என்ற நகருக்கு அண்மையில் உள்ள Bir al-Abed என்ற சிறுநகரில் உள்ள Al Rawdah என்ற மசூதி மீதே இந்த தாக்குதல் இடம்பெற்று உள்ளது.  முதலில் குண்டு தாக்குதல் செய்து, பின் துப்பாக்கிகளாலும் தாக்கி உள்ளனர்.
.
கடந்த ஜூலை மாதம் இப்பகுதியில் இராணுவம் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு 23 இராணுவத்தினர் பலியாகி இருந்தனர். மே மாதம் Coptic கிறிஸ்தவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு 29 பேர் பலியாகி இருந்தனர்.
.

2013 ஆம் ஆண்டு முன்னாள் இராணுவ அதிகாரி சிசி (Sisi) தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்திருந்த மோர்சியை (Morsi) இராணுவ கவிழ்ப்பின் மூலம் கைதுசெய்து, ஆட்சியையும் கைப்பற்றி இருந்தார். அதனை தொடர்ந்து எகிப்தில் பெருமளவு தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.
.