எண்ணெய்வள யுத்தத்தால் சரிந்த பங்குசந்தைகள்

Dow

சனிக்கிழமை சவுதி தனது எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து, அத்துடன் பரல் ஒன்றுக்கான விலையையும் குறைத்தால் இன்று திங்கள் உலக பங்குச்சந்தைகள் பாரிய வீழ்ச்சிக்கு உள்ளாகின. அமெரிக்காவின் DOW Jones Industrial Average இன்று 2,013 புள்ளிகளால் (7.8%) வீழ்ந்துள்ளது. DOW வின் வரலாற்றிலேயே இதுவே நாள் ஒன்றுக்கான அதிக வீழ்ச்சி ஆகும்.
.
அத்துடன் S&P 500 பங்குசந்தை சுட்டி 7.6% ஆல் வீழ்ந்துள்ளது. NASDAQ 7.3% ஆல் வீழ்ந்துள்ளது. கொரோனா வைரஸால் வீழ்ந்துள்ள பங்கு சந்தைகள் எண்ணெய் யுத்தத்தால் மீண்டும் வீழ்ந்துள்ளன.
.
நியூ யார்க் நேரப்படி திங்கள் காலை 9:30 மணிக்கு ஆரம்பமாகிய அமெரிக்க பங்கு சந்தைகள் சில நிமிடங்களில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சியால் நிறுத்தப்பட்டு, 15 நிமிடங்களின் பின் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. ஆனாலும் வீழ்ச்சி பிற்பகல் 4:00 மணிவரை தொடர்ந்தன.
.
சவுதி, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான மேற்படி எண்ணெய்வள யுத்தம் தொடர்ந்தால் பரல் ஒன்றின் விலை $20 ஆக குறையலாம் என்றும் கூறப்படுகிறது.
.
International benchmark Brent எண்ணெய் இன்று 29.07% பெறுமதியை இழந்து $32.11 ஆக குறைந்தது. அமெரிக்காவின் West Texas Intermediate எண்ணெய் 30.98% பெறுமதியை இழந்து $28.49 ஆக குறைந்தது.
.
JPMorgan, Citigroup, Bank of America ஆகிய அமெரிக்க வங்கிகளின் பங்குகளும் 10% க்கும் அதிகமாக வீழ்ந்து இருந்தன.
.
பதிலுக்கு பாதுகாப்பான சொத்தான தங்க விலை $1,700 ஐ அடைந்துள்ளது. 2012 ஆம் ஆண்டுக்கு பின் இதுவே தங்கத்தின் அதிக விலையாகும்.
.