ஏறியவுடன் தரையிறங்கிய Srilankan Flight UL 173

ஏறியவுடன் தரையிறங்கிய Srilankan Flight UL 173

இன்று 19ம் திகதி அதிகாலை 1:13 க்கு கொழும்பில் இருந்து இந்தியாவின் பெங்களூர் நகர் நோக்கி செல்லவிருந்த Srilankan விமான சேவை UL 173 மேலேறி சில நிமிடங்களில் கொழும்பு விமான நிலையத்தில் தரையிறங்கி உள்ளது.

இயந்திர கோளாறே விமானம் பயணத்தை இடைநிறுத்த காரணம் என்று கூறப்படுகிறது. இந்த விமானம் பல தடவைகள் வானத்தில் வட்டமடித்த பின்னரே தரையிறங்கி உள்ளது.

இந்த விமானம் Srilankan சேவையை செய்திருந்தாலும், இந்த விமானம் FitsAir விமான சேவைக்கு சொந்தமான Airbus A320 விமானமாகும்.