ஐரோப்பாவில் புலிகள் தொடர்ந்தும் பயங்கரவாதிகள்

LTTE

நேற்று செவ்வாய் ஐரோப்பிய நீதிமன்றம் (European Court of Justice) கூறிய தீர்ப்பில் புலிகள் (LTTE) ஒரு பயங்கரவாத இயக்கம் என்று மீண்டும் கூறியுள்ளது (Judgment ECLI:EU:C:2017:202).
.
LTTE ஒரு பயங்கரவாத இயக்கம் இல்லை என்றும், அதனால் அந்த இயக்கத்தை பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்கி, தற்போது முடக்கப்பட்டுள்ள அது சார்ந்த 4 நபர்களின் சொத்துக்களை (frozen assets) விடுவிக்க வேண்டும் என்றும் கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலேயே (Case C-158/14) இவ்வாறு தீர்ப்பு கூறப்பட்டு உள்ளது.
.

இந்த வழக்கில் கூறப்பட்ட A, B, C, D என்ற நால்வரும் புலிகளுக்கு நிதி சேர்ப்பு வசதிகள் செய்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டை ஐரோப்பிய நீதிமன்றம் தொடர்ந்து ஏற்றுக்கொண்டு உள்ளது.
.