கனடாவின் Ottawa நகரில் 6 சிங்கள குடும்பத்தினர் கொலை

கனடாவின் Ottawa நகரில் 6 சிங்கள குடும்பத்தினர் கொலை

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவின் சுற்றுப்புற நகரான Barrhaven பகுதியில் ஒரே குடும்பத்தை சார்ந்த ஐவர் உட்பட மொத்தம் 6 பேர் கத்தி போன்ற ஆயுதத்தால் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். தந்தை காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Darshani Ekanake, வயது 35, அவரின் பிள்ளைகள் 7 வயது Inuka, 4 வயது Aswini, 2 வயது Rinyana, கனடாவில் பிறந்த 2 மாத குழந்தை Kelly ஆகியோரும் அதே வீட்டில் வாழ்ந்த 40 வயது Amarakoon என்பவரும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

மூத்த பிள்ளைகள் இருவரும் Monsignor Paul Baxter School மாணவர் என்று Ottawa Catholic School Board கூறியுள்ளது.

அதே வீட்டில் வாழ்ந்த Febrio De Zoysa என்ற 19 வயது மாணவன் 6 படுகொலை குற்றங்களுக்காகவும், ஒரு கொலை முயற்சிக்காகவும் கைது செய்யப்பட்டுள்ளார். இவரும் இலங்கையில் இருந்து மாணவ விசாவில் சென்றவர் என்று கூறப்படுகிறது. 

அந்த நகரில் உள்ள Algonquin College அதிபர் மேற்படி மாணவன் இறுதியாக winter 2023 தவணையில் படித்திருந்தார் என்று கூறியுள்ளார். தற்போது நடைபெறுவது winter 2024 தவணை.

புதன்கிழமை இரவு 10:52 மணியளவில் 911 அவசரகால சேவைக்கு அழைப்பு வந்திருந்தது. கொலைகளுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.