கரோனாவால் மூங்கில் இன்றி தவிக்கும் கனடாவின் panda

Panda

கரோனா வைரஸ் பரவல் காரணமாக கனடாவின் Calgary மிருக காட்சி சாலையில் உள்ள பன்டாகள் (panda) விரும்பி உண்ணும் மூங்கிலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. அதனால் வேறு வழியின்றி Calgary காட்சி சாலையில் உள்ள இரண்டு பன்டாக்களும் மீண்டும் சீன செல்லவுள்ள.
.
போக்குவரத்துகள் தடைபட்ட காரணத்தால் கனடா வேறு இடங்களில் இருந்து மூங்கிலை பெற்று இருந்தாலும் Er Shun, Da Mao ஆகிய இரண்டு பன்டாக்களும் அவற்றை உண்ண மறுத்துவிட்டன. வேறு இடங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட மூங்கில் பன்டா விரும்பி உண்ணும் வகையானது அல்ல.
.
கரோனாவுக்கு முன்னர் மேற்படி பன்டாக்களுக்கு தேவையான மூங்கில் சீனாவில் இருந்தே எடுத்துவரப்பட்டது. சராசரியாக ஒவ்வொரு பன்டாவுக்கும், ஒவ்வொரு நாளும் சுமார் 40 kg மூங்கில் தேவை.
.
மேற்படி பன்டாக்கள் இரண்டும் 2013 ஆம் ஆண்டு, 10-ஆண்டு குத்தகை அடிப்படையில் கனடா சென்று இருந்தன. முதல் 5 ஆண்டுகள் அவை Toronto நகரில் இருந்தன. அவற்றின் குட்டிகளான Jia Panpan னும், Jia Yueyue யும் ஏற்கனவே சீனா சென்றுள்ளன.
.
பன்டாக்களை சீன குத்தகை அடிப்படையில் மட்டுமே மற்றைய நாடுகளுக்கு வழங்கும். குத்தகை முடிவில் அவை மீண்டும் சீனாவுக்கு செல்லும். அத்துடன் வெளிநாடுகளில் பிறக்கும் குட்டிகளும் சீனாவின் சொத்தே. அதனால் குட்டிகளும் கூடவே சீனா செல்லும்.
.
சீனாவின் 58 பன்டாக்கள் குத்தகை அடிப்படையில் 17 நாடுகளில் உள்ளன. இவை அனைத்தும் சீனாவின் Sichuan மாநிலத்தில் உள்ள Chengdu Research Base of Giant Panda Breeding அமைப்பின் கண்காணிப்பில் உள்ளன.
.