கொழும்பில் சீனாவின் மூன்று 60-மாடி கட்டிடங்கள்

PortCity

சீனா சுமார் U$1 பில்லியன் செலவில் மூன்று 60-மாடி கட்டிடங்களை கொழும்பு நகரில் கட்டவுள்ளது. இந்த கட்டிடங்கள் Colombo International Financial City அபிவிருத்தியின் ஒரு அங்கமாக இருக்கும்.
.
Colombo International Financial City அபிவிருத்திக்காக ஏற்கனவே சீனா, U$ 1.4 பில்லியன் செலவில், Gall Face பகுதியில் கடலை நிரப்பி 269 hectare நிலத்தை உருவாக்குகிறது. கடலை நிரப்பும் வேலை 60% பூர்த்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
.
இந்த கட்டுமான வேலைகள் சுமார் 83,000 புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும் என்றுள்ளது கட்டுமானங்களை நடாத்தும் சீன நிறுவனமான CCCC (China Communication Construction Company).
.

Port City எனப்படும் இந்த திட்டம் 2014 ஆம் ஆண்டில் ராஜபக்ச ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டு இருந்திருந்தாலும், பின்னர் சிறிசேன காலத்தில் முடக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் 2016 ஆம் ஆண்டில் இந்த வேலைகள் மீண்டும் தொடர்ந்தன.
.