சவுதியின் குண்டுக்கு யெமனில் 45 மாணவர் பலி

Yemen

இன்று வியாழன் சவுதி அரேபியாவின் தலைமையிலான இராணுவ அணி யெமனில் (Yemen) நடாத்திய விமான தாக்குதலுக்கு 45 மாணவர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் மேலும் சுமார் 43 மாணவர் காயம் அடைந்தும் உள்ளனர்.
.
மாணவர்களை ஏற்றி சென்ற பாடசாலை பஸ் ஒன்று மீது செய்யப்பட்ட குண்டு தாக்குதலே மாணவர்கள் பலியாக காரணமாக இருந்துள்ளது. இந்த சிறுவர்கள் 10 வயது முதல் 13 வயதுடையோர் ஆவர்.
.
அதேவேளை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மரணித்தோரில் குறைந்தது 29 பேர் 15 வயதுக்கும் குறைந்தோர் என்றுள்ளது.
.
ஐ. நா. செயலாளர் Antonio Guterres இந்த தாக்குதல் விசாரணை செய்யப்படல் வேண்டும் என்றுள்ளார். ஆனால் ஐ. நாவில் veto உரிமை கொண்ட அமெரிக்கா போன்ற சவுதி ஆதரவு நாடுகள் இந்த விடயத்தில் தலையிடாது மௌனமாக உள்ளன.
.
யெமென் யுத்தம் 2014 ஆம் ஆண்டில் ஆரம்பித்து இருந்தது. Houthis கிளர்ச்சியாளர் பெரும்பாலான நாட்டை கைப்பற்ற, அந்நாட்டு அரசு சவுதியின் ஆதரவை நாடியது. யெமென் அரசும், அமெரிக்காவும் Houthis கிளர்ச்சியாளருக்கு ஈரான் உதவுவதாக குற்றம் சாட்டின.
.
Houthis கிளர்ச்சியாளர் அவ்வப்போது சவுதியில் தாக்குதல் நடாத்துகின்றனர்.

.