சீனாவில் 458 பயணிகளுடன் கப்பல் மூழ்கியது

Yangtze

சீனாவின் பழம்பெரு நகரான நான்ஜிங் (NanJing) இலிருந்து Yangtze ஆறுவழியே சீனாவின் உட்பகுதில் உள்ள மற்றுமோர் பழம்பெரும் நகரான சொங்சிங் (ChongQing) நோக்கி உல்லாசப்பயணிகளை ஏற்றிவந்த உல்லாச கப்பல் ஒன்று 458 நபர்களுடன் மூழ்கியுள்ளது. உள்ளூர் நேரப்படி திங்கள் இரவு 9:30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அரச தவுகளின்படி இதில் 405 உல்லாச பயணிகள், 5 உல்லாச பயண நடாத்துனர், மற்றும் 48 பணியார்ளர் இருந்துள்ளனர். கப்பல் ஹுபேய் (Hubei) மாகாண பகுதில் பயணிகையிலேயே இடம்பெற்றுள்ளது.
.
Hubei
.
Yangtze ஆற்றுவழி பயணம் சீனாவின் புகழ்மிக்க உல்லாச பயண செயல்பாடுகளில் ஒன்று. வழக்கமாக இதில் அதிகம் வெளிநாட்டு பயணிகளும் அடங்கும்.
.
சீன பிரதமர் Li Keqiang உதவி பிரதமருடன் சம்பவ இடத்துக்கு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்றுள்ளதாக சீன அரசு கூறுகிறது.
.
இதுவரை 9 பயணிகள் காப்பாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கப்பல் மூழ்கிய இடத்தில் நீரின் ஆழம் சுமார் 15 மீட்டர் எனப்படுகிறது.
.