ஜப்பானில் 7.3 அளவில் நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் 7.3 அளவில் நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் புதன்கிழமை இரவு 7.3 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இப்பகுதியிலேயே 2011ம் ஆண்டு 9.0 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது.

இரவு 11:36 மணிக்கு இடம்பெற்ற இந்த நடுக்கத்தின் மையம் Fukushima கரையோரம், 60 km ஆழத்தில் இருந்துள்ளது. இந்த நடுக்கத்துக்கு டோக்கியோ நகரும் உள்ளாகி இருந்தது.

நடுக்கத்தின் விளைவாக 1 மீட்டர் (3.3 அடி) சுனாமி ஏற்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதுவரை பெரும் பாதிப்புகள் எதுவும் பதியப்படவில்லை என்றாலும், சுமார் 2 மில்லியன் வீடுகள் மின்சாரத்தை இழந்து உள்ளன.