திடீர் காஷ்மீர் யுத்த நிறுத்தத்துக்கு காரணமான உளவு எது?

திடீர் காஷ்மீர் யுத்த நிறுத்தத்துக்கு காரணமான உளவு எது?

மூர்க்கத்தின் உச்சத்தில் இருந்த இந்தியாவும், பாகிஸ்தானும் திடீரென ஒரு உடனடி யுத்த நிறுத்தத்துக்கு இணங்க அமெரிக்கா அறிந்த உளவு ஒன்றே காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் அந்த உளவு என்ன என்பது இதுவரை பகிரங்கத்துக்கு வரவில்லை.

அமெரிக்காவை மிரள வாய்த்த இந்த உளவு வெள்ளிக்கிழமை காலை அமெரிக்காவை அடைந்துள்ளது என்று கூறப்படுகிறது. இதை அமெரிக்கா “alarming intelligence” என்றே குறிப்பிடுகிறது.

இந்த உளவை அமெரிக்காவின் உதவி சனாதிபதி JD வன்ஸ் இந்திய பிரதமர் மோதிக்கு நியூ யார்க் நேரப்படி வெள்ளி மதியம் (இந்தியாவில் வெள்ளி இரவு) கூறியுள்ளார். அதன் பின்னரே இந்தியா யுத்தத்தில் இருந்து பின்வாங்க இணங்கியது என்றும் கூறப்படுகிறது.

சில தினங்களுக்கு முன் வன்ஸ் இந்திய-பாகிஸ்தான் யுத்தத்தில் அமெரிக்கா தலையிடாது என்று கூறியிருந்தார்.

சீனாவின் நவீன ஆயுதங்கள் இந்த யுத்தத்தில் பயன்படுத்தப்படுவதை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வந்துள்ளது. சீனாவின் J-10 யுத்த விமானம் கொண்டுள்ள ரேடார் jamming தொழில்நுட்பம் அமெரிக்காவை திகைக்க வைத்துள்ளது. சீனா தனது நவீன ஆயுதங்களை இந்த உண்மையான யுத்தத்தில் பரிசோதனை செய்ய முனைந்திருக்கலாம்.

வெள்ளி வன்ஸ் இந்திய பிரதமரை பாகிஸ்தானுடன் நேரடியாக உரையாட கேட்க, அதற்கேற்ப இந்தியாவும் பகிஸ்தானுடன் நேரடியாக உரையாட, யுத்தம் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.