ரஷ்யாவுக்கும் யூக்கிறேனுக்கும் இடையிலான யுத்தத்தை நிறுத்தும் நோக்கில் துருக்கியில் இன்று வியாழன் இடம்பெற இருந்த நேரடி பேச்சு தொடர்ந்தும் குழப்பத்தில் உள்ளது.
இந்த பேச்சு ரஷ்ய சனாதிபதி பூட்டினுக்கும், யூக்கிறேன் சனாதிபதி செலன்சிக்கும் இடையிலான நேரடி பேச்சாக இருக்கும் என்று முன்னர் கூறப்பட்டாலும், பூட்டின் இறுதி நேரத்தில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார். அதன் பின் அமெரிக்க சனாதிபதி ரம்பும் கலந்து கொள்ள மறுத்துவிட்டார். இறுதியில் செலன்ஸ்கியும் பங்கு கொள்ள மறுத்துவிட்டார்.
அதனால் வியாழன் மாலை 5:00 மணிவரை இந்த பேச்சு விபரம் பெரும் குழப்பத்திலேயே இருந்துள்ளது. தற்போதைய கூற்றுப்படி ரஷ்யாவினதும், யூக்கிறேனினதும் அதிகாரிகள் மட்டும் பேச்சில் ஈடுபடுவர் என்று தெரிகிறது. அதனால் இந்த பேச்சு பெரும் பலனை அளிக்கும் என்று கருதப்படவில்லை.
இந்த நேரடி பேச்சின் அவசியத்தை முதலில் தெரிவித்தது ரஷ்யாவே.
துருக்கி சென்றுள்ள செலன்ஸ்கி துருக்கி சனாதிபதி ஏர்டுவானை சந்தித்துள்ளார்.