பிரித்தானிய வெளியேற்ற வாக்கெடுப்பு பின்போடல்

UK

நாளை பிரித்தானிய பாராளுமன்றத்தில் இடம்பெறவிருந்த ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தான வெளியேற்ற வாக்கெடுப்பு மீண்டும் பின்போடப்பட்டு உள்ளது. பிரித்தானிய பிரதமர் தெரேசா மே ஏற்படுத்திக்கொண்ட பிரிவு திட்டம் போதிய வாக்குகளை வெற்றி கொள்ளாது என்ற காரணத்தாலேயே வாக்கெடுப்பு பின் போடப்பட்டு உள்ளது.
.
மே  தனது உரையில் “நாம் திட்டமிட்டபடி நாளை வாக்கெடுப்பை நடாத்தினால் பிரிவு திட்டம் அதிக வாக்குகளால் நிராகரிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
.
மே தலைமயிலான கூட்டணியின் 100 உறுப்பினர்வரை இந்த திட்டத்தை எதிர்ப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் எதிர்த்து வாக்களித்தால், மே பதவியை விட்டு விலக நேரிடலாம்.
.
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறினால், தரையால் இணைந்துள்ள பிரித்தானிய மாநிலமான வடக்கு அயர்லாந்துக்கும் (Northern Ireland), ஐரோப்பிய ஒன்றிய நாடாகவுள்ள அயர்லாந்துக்கும் (Ireland) இடையிலான எல்லை கடவைகளின் நிலை என்னவாகும் என்பது மிக முக்கிய கேள்வியாக உள்ளது.
.
மே மீண்டும் ஜெர்மன் அதிபர் அங்கெலா மெர்கலுடன் பிரித்தானிய வெளியேற்றம் தொடர்பாக உரையாடவுள்ளார்.
.