பொலநறுவையில் மும்மொழி பாடசாலை

SriLanka

இந்தியாவின் உதவியுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரதேசமான பொலநறுவையில் ஓர் பல்கலாச்சார, மும்மொழி பாடசாலை அமைக்கப்படவுள்ளது. இந்த உடன்படிக்கையை இலங்கைக்கான தூதுவர் Taranjit Singh Sandhuவும் இலங்கையின் கல்வி அமைச்சின் செயலாளர் Sunil Hettiarachchiயம் செய்து கொண்டார்கள்.
.
இந்த பாடசாலை கட்டுமானத்துக்கான செலவை, சுமார் 300 மில்லியன் இலங்கை ரூபாய்கள், இந்தியா வழங்கும். இப்பாடசாலைக்கு சிங்கள, தமிழ், இஸ்லாமிய மாணவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவர். இவர்களுக்கு சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகள் பயிற்றுவிக்கப்படும்.
.

இந்த திட்டம் ஜனாதிபதி சிறிசேனவின் இனங்களுக்கு இடையேயான ஒருமைப்பாடு, இணக்கம் ஆகிய கொள்கைகளுக்கு வலுவூட்டுமாம்.
.