போதை கடத்திய நீர்மூழ்கி கைது

USFlag

அமெரிக்காவுள் நீர்மூழ்கி மூலம் போதை கடத்த முயன்ற நீர்மூழ்கி கப்பல் ஒன்றை அமெரிக்காவின் கரையேற பாதுகாப்பு படை (Coast Guard) பசுபிக் கரையோரம் கைப்பற்றி உள்ளது. இந்த நீர்மூழ்கியில் பல்லாயிரம் தொன் போதை இருந்ததாக கூறப்படுகிறது.
.
கடந்த இரண்டு மாதங்களில் அமெரிக்க படைகளால் கைப்பற்றப்பட்ட போதைகளின் மொத்த பெறுமதி சுமார் $569 மில்லியன் என்று கூறப்படுகிறது. இக்காலத்தில் சுமார் 39,000 இறாத்தல் cocaine, 933 இறாத்தல் marijuuana என்பன கைப்பற்றப்பட்டு உள்ளன.
.
இந்த கடத்தல்களில் ஈடுபட்டிருந்த 55 பேர் அமெரிக்க படைகளால் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.
.
போதையை கடத்த பயன்படுத்தப்பட்ட நீர்மூழ்கி உள்ளூரில் தயாரிக்கப்பட்டது என்றும், எந்தவொரு நாட்டிலும் முறைப்படி பதிவு செய்யப்படாதது என்றும் அமெரிக்க படை கூறுகிறது.

.