மத்தள விமான நிலையம் இந்தியாவுக்கு?

Matala

இலங்கையின் தெற்கே மகிந்த அரசால் நிமாணிக்கப்பட்டு பெரும் பயன்பாடு இல்லாமல் இருக்கும் மத்தள விமான நிலையத்தை (Mattala Rajapaksa International Airport) இந்தியா கொள்வனவு செய்ய முனைகிறது. இந்திய நிறுவனம் ஒன்று மத்தள விமான நிலையத்தின் 70% உரிமையை வரும் 40 வருடங்களுக்கு கொள்வனவு செய்ய முன்வந்துள்ளது. இந்த உரிமைக்கு இந்திய நிறுவனம் $205 மில்லியன் வழங்கும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
.
இந்த திட்டத்தை இலங்கையின் Civil Aviation அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா அமைச்சரவைக்கு அனுப்பி உள்ளார்.
.
இந்த விமான நிலையத்தை இயக்க மொத்தம் 8 குழுக்கள் விருப்பம் தெரிவித்து உள்ளன. அதில் சீனாவின் திட்டம் ஒன்றும் அடங்கும்.
.

இந்த விமான நிலையம் $209 மில்லியன் கடன் பெற்று நிர்மாணிக்கப்பட்டது. இக்கடனில் பெருமளவு சீனாவிடம் இருந்தே பெறப்பட்டது. சீனாவின் Exim Bank என்ற வங்கியிடம் மட்டும் $190 மில்லியன் கடன் பெறப்பட்டதாம்.
.