மன்னார் கடலில் எண்ணெய் அகழ்வு

SriLanka

இலங்கையின் வடமேற்கு பகுதியான மன்னாரை அண்டிய கடலில் எண்ணெய் அகழ்வு பணிகளில் இலங்கை ஈடுபடவுள்ளது. இந்த பணிகளை செய்யும் உரிமையை இலங்கை அரசு பிரான்சின் Total என்ற எண்ணெய் அகழ்வு நிறுவனத்துக்கும், நோர்வேயின் Equinor நிறுவனத்துக்கும் வழங்கி உள்ளது.
.
2023 ஆம் ஆண்டளவில் எண்ணெய் அகழ்வு செயல்பாட்டுக்கு வரலாம் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
.
தற்போது எண்ணெய் உற்பத்தி அற்ற நாடான இலங்கை 2018 ஆம் ஆண்டில் $4.15 பில்லியன் பெறுமதியான எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளது.
​.
மன்னார் பகுதியில் உள்ள 30,000 சதுர km கடலில் சுமார் 1 பில்லியன் பரல் எண்ணெய் உள்ளதாக இலங்கை கூறுகிறது.
.
இலங்கையின் கிழக்கேயும் எண்ணெய் அகழ்வு பணிகள் ஆரம்பமாவுள்ளன.
.
Equinor தான் செய்யும் திட்டங்களின் 30% செலவை பொறுப்பு ஏற்கும்.
.​