மொசாம்பிக்கில் சூறாவளிக்கு 1,000 பேர் வரை பலி

Mozambique

ஆபிரிக்க நாடான மொசாம்பிக்கை (Mozambique) கடந்த வியாழன் தாக்கிய Idai என்ற சூறாவளிக்கு சுமார் 1,000 பேர் பலியாகி உள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி கூறியுள்ளார். இந்த சூறாவளி Beira என்ற நகரை 177 km/h காற்று வீச்சில் தாக்கி உள்ளது.
.
சுமார் 500,000 மக்களை கொண்ட Beira நகரில் உள்ள அனைத்து கட்டிடங்களும் எதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டு உள்ளது என்று கூறுகிறது ஐ.நா.
.
இந்த நகருக்கும் நாட்டின் மற்றைய பகுதிகளுக்குமான பாதைகளும் முற்றாக அழிந்துள்ளன. அதனால் உதவிகள் செல்வதும் தாமதமாகி உள்ளன.
.
Doctors Without Borders தனது கூற்றில், ஆறுகள் மேவி பாய்ந்ததால், வீடுகள் நீருள் அமிழ்ந்து, சுமார் 11,000 பேர் Nsanje என்ற நகரில் மட்டும் இடம்பெயர்ந்து உள்ளனர்.
.
இந்த சூறாவளி சிம்பாப்வேயையும் (Zimbabwe) தாக்கி உள்ளது. அங்கு சுமார் 100 பேர் பலியாகி உள்ளனர். அத்துடன் சுமார் 215 பேரை காணவில்லை.
.