சிரியாவின் முன்னாள் சர்வாதிகாரி அசாத் விரட்டப்பட்டு, பின் அங்கு ஆட்சியை கைப்பற்றிய சர்வாதிகாரி Ahmad al-Sharaa வை சவுதி சென்ற அமெரிக்க சனாதிபதி ரம்ப் சந்தித்து உரையாடி உள்ளார்.
அத்துடன் சிரியா மீதான அமெரிக்காவின் தடைகளையும் நீக்கவுள்ளதாக ரம்ப் கூறியுள்ளார்.
Ahmad முன்னர் அல்கைய்டாவின் பங்காளி ஒருவர். இவரின் Hayat Tahrir al-Sham (HTS) என்ற ஆயுத குழு al Nusra Front மூலம் அல்கைடாவில் அங்கம் கொண்டிருந்தது.
அக்காலத்தில் அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளும், ஐ.நாவும் இவரை ஒரு பயங்கரவாதி ஆகவே கணித்தன. அமெரிக்கா இவரின் தலைக்கு $10 மில்லின் bounty அறிவித்திருந்தது.
இவரை சவுதியும், துருக்கியும் முன்னின்று ரம்புடன் சந்திக்க வைத்தன. இவர் சிரியாவில் ஆட்சி செய்தாலும், சவுதியில் பிறந்தவர், அமெரிக்கா இராணுவத்துக்கு எதிராக ஈராக்கில் போராடியவர்.