அங்கோலாவில் முன்னாள் ஆட்சி மகன் கைது

Angola

ஆபிரிக்க நாடான அங்கோலாவின் (Angola) முன்னாள் ஜனாதிபதி Jose Eduardo dos Santos என்பவரின் மகனான Zenu என்று அழைக்கப்படும் Jose Filomeno dos Santos அந்நாட்டு புதிய அரசால் ஊழல் குற்றசாட்டுகள் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார்.
.
Zenuவின் தந்தை அங்கோலாவை 1979 ஆம் ஆண்டு முதல் 2017 ஆண்டுவரை ஆட்சி செய்தவர். ஜனாதிபதியான தந்தை 2013 ஆம் ஆண்டில் 35 வயதான மகனை அங்கோலாவின் sovereign wealth fund குக்கு chairman ஆக நியமித்தார்.
.
முன்னாள் பாதுகாப்பு அமைச்சரை ஜனாதிபதியாக கொண்ட புதிய அரசு தற்போது முன்னாள் ஜனாதிபத்தின் மகன் மீது ஊழல் வழக்குகளை ஆரம்பித்து உள்ளது. Zenu சுமார் $500 மில்லியன் பொது பணத்தை களவாடியதாக கூறப்படுகிறது.
.
சுமார் $2.5 பில்லியன் பொது நிதியானது Quantum Global என்ற முதலீட்டு நிறுவனத்துக்கு மாற்றப்பட்டு இருந்துள்ளது. Quantum Global என்ற நிறுவனம் JeanClaude Bastos de Morais என்ற அங்கோலா-சுவிஸ் வர்த்தகருக்கு உரியது. இந்த வர்த்தகர் Zenuவின் வர்த்தக கூட்டாளி ஆவார்.
.
புதிய அரசு முன்னாள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பல உயர் அதிகாரிகளையும் பதிவு நீக்கம் செய்து வருகிறது.
.
Isabel dos Santos என்ற முன்னாள் ஜனாதிபதியின் மகளின் எண்ணெய்வள தலைவர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. இவரே ஆபிரிக்காவின் முதலாவது பெரிய பணக்கார பெண் ஆவார். 2017 ஆம் ஆண்டில் இவரிடம் இருந்த மொத்த சொத்துக்கள் $3.5 பில்லியன் என்று கூறப்படுகிறது. இவர் தொலைத்தொடர்பு, வைர வர்த்தகம், உல்லாச பயணத்துறை ஆகிய வர்த்தகங்களில் முதலீடு செய்துள்ளார். ஐரோப்பாவில் தங்கி உள்ள இவர், சகோதரனின் கைதின் பின், நாடு திரும்பும் எண்ணத்தில் இல்லை.
.
IMF கூற்றுப்படி அண்மைய காலங்களில் அங்கோலாவின் $32 பில்லியன் எண்ணெய்வள வருமானம் தடயங்கள் எதுவும் இன்றி தொலைந்துள்ளது.
.