அமெரிக்க-ஆப்கான் தாக்குதலுக்கு 40 பேர் பலி

Afhanistan

அமெரிக்க படைகளின் உதவியுடன் ஆப்கானிஸ்தான் படைகள் மேற்கொண்ட இராணுவ தாக்குதலுக்கு திருமண வீடு ஒன்றில் இருந்த 40 பொதுமக்கள் பலியாகி உள்ளனர். ஞாயிரு இரவு இடம்பெற்ற இந்த தாக்குதலுக்கு மேலும் 12 பேர் காயமடைந்தும் உள்ளனர்.
.
Musa Qala என்ற பகுதியில், திருமண வீட்டுக்கு அருகில் தலபான்கள் பயிற்சி பெறுவதாக கூறியே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
.
ஆனால் ஆப்கானிஸ்தான் அரச படைகள் தாம் 22 தலபான்களை கொலை செய்ததாகவும், 14 பேரை கைது செய்ததாகவும் கூறியுள்ளன.
.
ஒரு கிழமைக்கு முன்னரும் அமெரிக்க விமானம் வீசிய குண்டுக்கு 30 பொதுமக்கள் ஆப்கானிஸ்தானில் பலியாகி இருந்தனர்.
.
2018 ஆம் ஆண்டு ஜனவரி முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் வரையான 20 மாத காலத்தில் அமெரிக்கா 11,845 குண்டுகளை ஆப்கானிஸ்தாளில் வீசியுள்ளது. ஆனால் 2013 முதல் 2017 ஆண்டு வரையான 11.768 குண்டுகளை மட்டுமே அமெரிக்கா அங்கு வீசியிருந்தது.
.